Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
முதுகு மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் ஆனந்த பாலாசனா !!
முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரியான உணவு, உடற்பயிற்சி, இல்லாததே முதன்மையான காரணம். அதன்பின் நாள் முழுவதும் அமர்ந்து கொண்டேயிருப்பதும் , சரியான முறையில் தூங்காமலிருப்பதும் காரணங்களாகும்.
இதற்கு மிக எளிதான தீர்வாக ஒரு வலியை குறைக்கும் மருந்தை வாங்கி விழுங்கவதோடு முடிந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அவற்றின் வீரியமும், பக்க விளைவும் உங்கள் உடலை மிகவும் பாதிக்கும். இதனை மாத்திரையில் பிரச்சனைகளை விலைக்கு வாங்காமல், வேறுவிதமாக தீர்வு காண முயலுங்கள்.

உடற்பயிற்சி செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல் அவ்வப்போது நடப்பது என முயற்சிக்க வேண்டும். இன்னும் எளிமையான ஒன்று யோகா செய்யுங்கள். யோகாவினால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
ஆனந்த பாலாசனா!
ஆனந்த என்றால் சந்தோஷமான, பால என்றால் குழந்தை, ஆறு மாதக் குழந்தை கால் விரல்களை எடுத்து கைகளில் பிடித்துக் கொள்வது போல செய்யப்படும் இந்த யோகாவிற்கு ஆனந்த பாலாசனா என்று பெயர் வந்துள்ளது.
செய்முறை :
முதலில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டபின் தரையில் படுங்கள். முதுகு தரையோடு இருக்கும்படி படுங்கள்.
பின்னர் கால்களை மேல் நோக்கி நீட்டவும். இரு முட்டிகளும் சேர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பின் மெதுவாக காலை வளைத்து, கால் கட்டை விரலை கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். இதே நிலையில் 20- 30 நொடிகள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இதுபோல் 4 தடவை செய்யுங்கள்.
பலன்கள் :
அடிவயிற்றில் தசைகளை சுருங்கச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிறு நீரகம், வயிறு ஆகியவை பலம் பெறும். மன அழுத்தம் குறையும். இடுப்பு வலி குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













