Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!
பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி, இருமல், காய்ச்சல் ஆடி தள்ளுபடி போல ஒட்டிக்கொண்டு வந்துவிடும்.
சாதாரணமாக இவை ஓரிரு நாட்களில் ஓடிவிட்டாலும், இந்த அடி மாத குளிரில், ஒவ்வொரு விடியலிலும் சூரியனோடு சேர்ந்து இதுவும் விடிய ஆரம்பித்து விடும். இந்த விடாத கருப்பை ஒரே நாளில் தூர விரட்ட சில எளிய பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனி பாப்போம்...

சர்க்கரை இல்லாது கடுங்காப்பி
சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலை வேளையில் குடித்து வந்தால் சளி குறையும்.

யூகலிப்டஸ் எண்ணெய்
யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் நன்கு தடவி வந்தால் சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.

மாதுளம் பழம்
மாதுளம் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குறையும்.

காய்ச்சல் குறைய..
அரிசிதிப்பிலியை நன்கு காயவைத்து, பிறகு அதை இடித்து வெற்றிலைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் எளிதில் குறையும்.

கற்பூரவல்லி மற்றும் துளசி
துளசி மற்றும் கற்பூரவல்லி இரண்டையும் சம அளவு எடுத்து ,அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி விகிதம் என தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.

ஆட்டுகால் சூப்
சளி அல்லது நெஞ்சு சளி அதிகமானால், மிளகு கொஞ்சம் அதிகம் சேர்த்த ஆட்டுக்கல் சூப் குடித்தால் போதும், ஒரே நாளில் சளி மொத்தமும் குறைந்துவிடும். இதமான சூட்டில் பருக வேண்டியது அவசியம்.

மிளகு ரசம்
சளியில் இருந்து குணமடைய எளிய வழி மிளகு ரசம் மற்றும் கொள்ளு ரசம். இவை இரண்டுமே சளியை ஒரே நாளில் போக்கக்கூடிய தன்மை கொண்டவை.

துளசி மற்றும் இஞ்சி
துளசி இலைச்சாறு மற்றும் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பருகி வந்தால் சளி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இஞ்சி டீயும் சளி பிரச்சனைக்கு நல்ல தேர்வு தரும்.

சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் தேன்
சின்ன வெங்காயச்சாறு 20 மில்லி, இஞ்சிச்சாறு 20 மில்லி, தேன் 20 மில்லி என இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து இரு தினங்கள் ஒரு வேளை மட்டும் உணவுக்கு முன் பருகி வந்தால், சளி, இருமல் குறையும்.



Click it and Unblock the Notifications











