Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!!!
நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான். ஆனால் இப்படி மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?
ஆம், இக்காலங்களில் உடலுறவில் ஈடுபட்டால், அவை சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். அதிலும் உங்கள் துணை சுத்தமாக இல்லாவிட்டால், பாலியல் நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மேக வெட்டை நோய் போன்றவை வரக்கூடும். எனவே எப்போது உடலுறவில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்னரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
பிரா அணியாமல் இருப்பது நல்லது என்பதற்கான சில ஆரோக்கியமான காரணங்கள்!!!
அதிலும் மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அதிக அளவில் சோர்வு இருப்பதுடன், இக்காலத்தில் தான் விரைவில் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்தணுவுடன் சேர்வதால், அவை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும்.
இங்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால் சந்திக்கக்கூடிய விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
துணையை அணைத்தபடி தூங்கினா இவ்ளோ லாபம் இருக்குதாம்...!

நோய்த்தொற்றுகள்
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடாமல், 2-3 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

பால்வினை நோய்கள்
மற்றொரு முக்கியமான விளைவு, மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மருக்கள் போன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், மாதவிடாய்க்கு 2 நாட்கள் கழித்து ஈடுபடுவதுடன், எப்போதும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டும்.

கருத்தரிக்கவே முடியாது
நிபுணர்களின் கருத்துப்படி மாதவிடாய் காலத்திற்கு முன்போ அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கவே முடியாது. எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள், இக்காலத்தில் முயற்சிப்பது வீண். வேண்டுமானால் மாதவிடாய் முடிந்து இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்தரிக்கலாம்.

அளவுக்கு அதிகமான சோர்வு
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தம் வெளியேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக்கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்படுத்தும்.

மாதவிடாய் பிரச்சனைகள் அதிகரிக்கும்
மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாய் காலத்தில் வித்தியாசமான உணர்ச்சிகள், குழப்பமான மனநிலை மற்றும் அதிகமான வயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

மாதவிடாய் காலத்தை பாதிக்கும்
மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித்து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக்காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications