Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?

உணவுகளானது கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். அதிலம் முக்கியமாக நைட்ரைட் என்னும் பொருள் உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நேரம் வைக்கிறது. மேலும் அத்தகைய உணவுகளில் கார்சினோஜென் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் இருக்கிறது. அதன் காரணமாகவே பல நாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு தடை விதிக்கின்றனர். ஆனால் ஒரு சில நாடுகளில் அவற்றிற்கு தடை விதிக்கவில்லை. ஆகவே உடலானது ஆரோக்கியமாக இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்பதை விட, சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பல வகையான புற்றுநோய்கள் வருகின்றன. அதில் அதிகமாக வரக்கூடியது கணையப் புற்றுநோய். இந்த நோய் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைக் கொல்லும். இந்த நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால் சிறிதளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டாலே, அந்த நோய் வரும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போதைய ஆய்வில், இந்த உணவு உண்பவர்களுக்கு சிகரெட் பிடிப்பவர்களை விட அதிக அளவு கணைய புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில உணவுகள் உடலில் கொழுப்புகளை சேர்த்து உடல் பருமனை அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
அதற்காக எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ணக்கூடாது, அனைத்து உணவுகளும் புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லவில்லை. ஒரு சிலவற்றை உண்ணலாம், ஆனால் குறைந்த அளவே உண்ண வேண்டும். ஆகவே ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சுத்தமான காய்கறி மற்றும் பழங்களை உண்ணலாம். மேலும் கடைகளில் உணவுப்பொட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள உணவுகளை, பதப்படுத்தாத உணவுகளை வாங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்றால் தினமும் 50 கிராம் அளவு மட்டும் போதுமானது.
ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, சுத்தமான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











