Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மன அழுத்தமா? உடம்பும் மனசும் குளிர நல்லா குளிங்க!

எண்ணெய் மசாஜ்
'சனி நீராடு' என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
இயற்கை மூலிகைகள்
குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
பொடுகு நீக்குங்கள்
மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
சத்தானதா சாப்பிடுங்க
மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











