Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உங்க கண்ணு இந்த மாதிரி இருக்கா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரப்போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்..
Heart Attack Symptoms In Eyes: குளிர்காலம் வந்துவிட்டது. இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் இதய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். சொல்லப்போனால் இதய பிரச்சனைகளை இக்காலத்தில் தான் நிறைய பேர் சந்திப்பார்கள். குறிப்பாக நிறைய பேருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது.
உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்தத்தை அனுப்பி தினசரி உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கும் இதயம், குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலி, நெஞ்சு பகுதியில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தெரியும். இப்படி நெஞ்சு வலியைத் தவிர, ஒருசில அறிகுறிகள் கண்களிலும் தெரியும்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், நம் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் தொடர்புடையது. எனவே ஒரு பகுதியில் ஏதேனும் பிரச்சனை அல்லது ஆபத்து என்றால், அது மற்ற பகுதிகளில் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். அப்படி தான் மாரடைப்பு ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் கண்களியும் தெரியும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம். உங்களுக்கும் அந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை
இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடலின் மற்ற உறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போகும். இப்படி இரத்த ஓட்டம் போதுமான அளவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடிய ஒரு உறுப்பு தான் கண்கள். பார்வை நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்தால், அதன் விளைவாக பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வையை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் பார்வை நரம்புகள் தான் மூளைக்கு ஒரு விஷயத்தை பார்ப்பாற்கான சமிக்ஞைகளை அனுப்ப முக்கியமான காரணம். ஆனால் திடீரென்று பார்வை இழப்பு அல்லது மங்கலான பார்வை ஏற்பட்டு, அத்துடன் நெஞ்சு பகுதியில் வலியை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
சமமற்ற அளவில் கருவிழிகள்
மாரடைப்பு வரவுள்ளது என்பதை கண்களில் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிகுறி தான் கருவிழிகள் சமமற்ற அளவில் இருப்பது. பொதுவாக கண்களில் உள்ள கருவிழி ஒரே அளவில் தான் இருக்கும். ஆனால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் போதும், பார்வை நரம்புகளில் ஏற்படும் சேதத்தால் ஒரு கருவிழி மற்றொன்றை விட பெரியதாக மாறலாம்.
கண்களில் மஞ்சள் புடைப்புகள்
உங்கள் கண்களின் வெண்பகுதியில் அசாதாரமாக மஞ்சள் நிற புடைப்புகள் தென்படுகிறதா? வழக்கமாக இம்மாதிரியான புடைப்புகள் மிகவும் சிறிதாக இருக்கும். இதை சாந்தெலஸ்மாஸ் என்று அழைப்பர்.
பொதுவாக இது உடலில் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாகும் போது, அது கண்களில் கொழுப்புக்களை படிய வைத்து, மாரடைப்பு வருவதற்கான அபாயம் இருப்பதை நமக்கு சுட்டிக் காட்டும். உங்கள் கண்களிலும் இப்படி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், மருத்துவரிடம் சென்று உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து பாருங்கள்.
இமைகள் தொங்குவது
மாரடைப்பு வரவுள்ளது என்பதை வெளிக்காட்டும் மற்றொரு விசித்திரமான அறிகுறி தான் கண் இமைகள் தொங்குவது. பொதுவாக இது ஹார்னர்ஸ் சிண்ட்ரோம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு அரிய வகை நரம்பு பிரச்சனை. சில சமயங்களில் இது மாரடைப்பையும் தூண்டலாம். எனவே இம்மாதிரியான அறிகுறி உங்கள் கண்களின் தென்பட்டால், மருத்துவரை உடனே சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
சிவந்த கண்கள்
நிறைய பேர் கண்கள் சிவந்து போனால், அது போதுமான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகிறது என்று, அதை சாதாரணமாக விட்டுவிடுவார்கள். ஆனால் கண்கள் திடீரென்று சிவந்து போவது மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகளுள் ஒன்று.
உடலில் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயரும் போது, அது கண்களின் நிறத்தை சிவக்கச் செய்துவிடுகிறது. இரத்த அழுத்தம் கட்டுப்பாடின்றி அதிகரித்தால், அது மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே உங்களுக்கு கண்கள் திடீரென்று சிவந்து போனால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications