Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள்!
எலும்பு வலி நீங்க, எலும்புகள் வலிமை பெற உதவும் கைதேர்ந்த பாட்டி வைத்தியங்கள்!
ஒருவேளை பாட்டிகள் நமது வீட்டிலேயே இருந்திருந்தால், தெருவுக்கு ஒரு கிளினிக், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் வந்திருக்காது.
அதிலும், இப்போது கண், காது, மூக்கு என தனித்தனி மருத்துவமனைகள், வித்தியாச வித்தியாசமான வகையில் பரிசோதனைகள் செய்து காசை பிடுங்கி விடுகிறார்கள்.
உட்கார்ந்தே வேலை செய்வதனால் தற்போதைய தலைமுறை அதிகம் எலும்பு ஆரோக்கியம் குறைந்து காணப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் உடனே, ஸ்கேன் செய்து பில்லை தீட்டி விடுவார்கள்.
ஆனால், மிக குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த பாட்டி வைத்தியங்களை மேற்கொண்டால் நல்ல பலனை மிக விரைவாக காண முடியும்...

குழந்தைகள்!
வளரும் குழந்தைகள் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கொய்யா பழம் கொடுத்து வாருங்கள். இது எலும்புகளின் வலிமையை உறுதியாக்கும்.

வலிமை!
எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்க, கோபுரம் தாங்கி செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை இருவேளை உண்டு வந்தால் நல்ல பயன் காணலாம்.

நோய்!
எலும்பு நோய் உள்ளவர்கள், முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவளை இலை இரண்டையும் காய வைத்து இடித்து பொடியாக்கி சூரணமாக இரண்டு கிராம் உட்கொண்டு வந்தால் எலும்பு நோய்கள் குணமடையும்.

முறிந்த எலும்பு!
பிரண்டை வேர்களை உலர்த்தி பொடியாக்கி ஒரு கிராம் தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வந்தால் முறிந்த எலும்பு நல்ல வலு பெறும்.

முறிவு!
எலும்பு முறிவு உண்டான இடத்தில், கழுவி எடுத்து அரைத்த அசோகப்பட்டையை வைத்து கட்டினால் எலும்பு சீக்கிரம் கூடும்.



Click it and Unblock the Notifications











