Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வாய் துர்நாற்றமா? இதை சாப்பிட்டா தடுக்கலாம்!!
வாய் துர் நாற்றம் என்பது மிகவும் சங்கோஜப்படக் கூடிய விஷயம். மற்ற பாதிப்புகள் வெளியே தெரியாது. ஆனால் வாய் துர் நாற்றம் நம்மை மட்டுமல்லாது பக்கத்திலிருப்பவரையும் நெளிய வைக்கும். இதனால் வாய் துர் நாற்றம் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பேசவே தயங்குவார்கள். தனிமையில் இருப்பார்கள்.
இப்படி குறையை மறைப்பதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா? அதற்கு தீர்வு காண முயலுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் எவை தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பல்விளக்கிய பின் என்ன செய்யலாம்?
பல் விளக்கியபின் சமையல் சோடா 1 ஸ்பூன் எடுத்து அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து கொப்பளியுங்கள். பல் இடுக்களிலும் நீர் செல்லும்படி சுமார் 1 நிமிடம் வரை கொப்பளியுங்கள். சமையல் சோடா துர் நாற்றத்தை உண்டுபண்ணும் பேக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் சில நொடிகளில் உங்கள் வாய் துர் நாற்றம் காணாமல் போகும்.

அடுத்து செய்ய வேண்டியவை :
பற்களைப் போல இருமடங்கு அழுக்குகளும் கிருமிகளும் உங்கள் நாக்கின் துவாரங்களில் இருக்கும். அவைகளால் துர் நாற்றம் உண்டாகும். இதனால் நாக்கை மறக்காமல் தினமும் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கப் போகும் முன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதி பிரச்சனைகள் முடியும்.

இரவில் செய்ய வேண்டியவை :
தூங்குவதற்கு முன் எதையும் சாப்பிடாதீர்கள். இதனால் கிருமிகள் வேகமாக வாயில் உருவாகிவிடும். முக்கியமாய் பால் குடிக்கும் வழக்கம் இருப்பவர்கள் குடித்தவுன் வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள். பால் வாயில் பற்சிதைவு உண்டாக முக்கிய காரணமாகும்.

பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் :
பற்களில் சிதைவு, சொத்தை இருந்தால் வாயில் துர் நாற்றம் உண்டாகும். அவாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

நீர் குடிக்கிறீர்களா?
அடிக்கடி நீர் குடித்தால் கிருமிகள் பற்களில் தங்காது. அடித்துச் சென்றுவிடும். ஆகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நீர் குடியுங்கள். மறு நாள் பாருங்கள். உங்கள் வாயில் துர் நாற்றம் உண்டாகாது.

காரம் சாப்பிடுபவரா?
காரம் சாப்பிடுபவர்களுக்கு வாயில் துர் நாற்றம் உண்டாகாது. காரணம் அவர்களுக்கு வாயில் அதிக எச்சில் சுரக்கும். எச்சிலில் இருக்கும் என்சைம் கிருமி நாசினி. பேக்டீரியாக்களை அழித்துவிடும். ஆகவே காரமான உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.



Click it and Unblock the Notifications











