Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வாய் துர்நாற்றமா? இதை சாப்பிட்டா தடுக்கலாம்!!
வாய் துர் நாற்றம் என்பது மிகவும் சங்கோஜப்படக் கூடிய விஷயம். மற்ற பாதிப்புகள் வெளியே தெரியாது. ஆனால் வாய் துர் நாற்றம் நம்மை மட்டுமல்லாது பக்கத்திலிருப்பவரையும் நெளிய வைக்கும். இதனால் வாய் துர் நாற்றம் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பேசவே தயங்குவார்கள். தனிமையில் இருப்பார்கள்.
இப்படி குறையை மறைப்பதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா? அதற்கு தீர்வு காண முயலுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் எவை தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பல்விளக்கிய பின் என்ன செய்யலாம்?
பல் விளக்கியபின் சமையல் சோடா 1 ஸ்பூன் எடுத்து அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து கொப்பளியுங்கள். பல் இடுக்களிலும் நீர் செல்லும்படி சுமார் 1 நிமிடம் வரை கொப்பளியுங்கள். சமையல் சோடா துர் நாற்றத்தை உண்டுபண்ணும் பேக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் சில நொடிகளில் உங்கள் வாய் துர் நாற்றம் காணாமல் போகும்.

அடுத்து செய்ய வேண்டியவை :
பற்களைப் போல இருமடங்கு அழுக்குகளும் கிருமிகளும் உங்கள் நாக்கின் துவாரங்களில் இருக்கும். அவைகளால் துர் நாற்றம் உண்டாகும். இதனால் நாக்கை மறக்காமல் தினமும் காலை எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்கப் போகும் முன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதி பிரச்சனைகள் முடியும்.

இரவில் செய்ய வேண்டியவை :
தூங்குவதற்கு முன் எதையும் சாப்பிடாதீர்கள். இதனால் கிருமிகள் வேகமாக வாயில் உருவாகிவிடும். முக்கியமாய் பால் குடிக்கும் வழக்கம் இருப்பவர்கள் குடித்தவுன் வாய் கொப்பளிக்க மறக்காதீர்கள். பால் வாயில் பற்சிதைவு உண்டாக முக்கிய காரணமாகும்.

பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் :
பற்களில் சிதைவு, சொத்தை இருந்தால் வாயில் துர் நாற்றம் உண்டாகும். அவாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

நீர் குடிக்கிறீர்களா?
அடிக்கடி நீர் குடித்தால் கிருமிகள் பற்களில் தங்காது. அடித்துச் சென்றுவிடும். ஆகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நீர் குடியுங்கள். மறு நாள் பாருங்கள். உங்கள் வாயில் துர் நாற்றம் உண்டாகாது.

காரம் சாப்பிடுபவரா?
காரம் சாப்பிடுபவர்களுக்கு வாயில் துர் நாற்றம் உண்டாகாது. காரணம் அவர்களுக்கு வாயில் அதிக எச்சில் சுரக்கும். எச்சிலில் இருக்கும் என்சைம் கிருமி நாசினி. பேக்டீரியாக்களை அழித்துவிடும். ஆகவே காரமான உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.



Click it and Unblock the Notifications