Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ஏன் பனிக்காலத்தில் காதில் வலி உண்டாகிறது? அதற்கு தீர்வுகள் என்ன?
உள் காதுப் பகுதிகளில் உங்களுக்கு உலர்ந்த சீரற்ற தோல் இருக்கின்றதா? இங்கே உங்களுக்கு உதவுதற்காக 10 சிகிச்சை முறைகளை பட்டியலிடப்பட்டுள்ளோம்.
பனிக்காலம் பல்வேறு தோல், சுவாசக் கோளாறு மற்றும் தொற்று நோய்கள் வேகமாக உருவாக்குகின்றது. உங்களின் உட்புற காதில் தோல் வறண்டு சீரற்ற முறையில் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றதா?

அரிக்கும் தோல், செதில் போன்ற மற்றும் பிளவுபட்ட உள் காது தோல்களுக்கு பின்னால் ஈஸ்ட் அல்லது பூஞ்சை வளர்ச்சி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, காலநிலை மாற்றம், மற்றும் புதிய ஷாம்பு பயன்பாடு போன்ற பல்வேறு சிக்கலான அல்லது எளிய காரணங்கள் இருக்கலாம்.
உங்களின் காதுகளை பாதுகாக்கக் கூடிய 10 வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

கற்றாழை :
கற்றாழையில் உள்ள அலிசின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தோலின் pH நிலையை மீட்டு வீக்கத்தை குறைக்கின்றது.
ஒரு கற்றாழையின் ஜெல்லை எடுத்து ஒரு விரலில் எடுத்து உங்களுடைய உள் காதின் சீரற்ற தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
உங்களுடைய வறண்ட தோல் கற்றாழை சாற்றை உறிஞ்சிக் கொள்ளும் வரை விட்டு விடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை இதை செய்திடுங்கள்.

ஆப்பிள் சைடர் வினிகர்
நோய் எதிர்ப்பு குணங்கள் நிறைந்த இது பூஞ்சையை அழித்து, அரிப்பை தடுத்து காதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்திகரிக்கின்றது.
சம அளவு தண்ணீர் மற்றும் ஆப்பிள் சாறு வினிகர் கலந்து காதைச் சுற்றியுள்ள பகுதியை மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் ஆற விட்ட பின்னர் அதை ஒரு ஈரமான துண்டு சுத்தமாக துடைத்து விடுங்கள். இந்த சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு எண்ணெய்
இரு எண்ணெய்களிலும் ஒன்றாக பூஞ்சை எதிர்ப்புத் திறன், பாக்டீரியா அழிப்புத் திறன் உள்ளது. எனவே இந்தக் கலவையை காதில் தடவும் பொழுது இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.
இந்த இரு எண்ணைய்களையும் சம விகிதத்தில் கலந்து உங்கள் காதுகள் மீது மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பின்னர் அதை சுமார் 20 நிமிடங்கள் உலர விட்டு அதை தண்ணீர் கொண்டு மெதுவாக துடைத்து எடுக்க வேண்டும்.

ஆல்கஹால்
ஒரு பங்கு ஆல்கஹாலுடன் ஒரு பங்கு வினிகர் கலக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு சில துளிகள் உங்களுடைய உள் காது பகுதியில் சேர்க்க வேண்டும்.
ஒரு சில நொடிகள் அப்படியே விட்டு விட்டு அதன் பின்னர் காதை மறு புறம் சாய்த்து இந்த துளிகளை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும்.
ஆல்கஹால் உங்களுடைய காதில் உள்ள மெழுகை கரைத்து விடும். வினிகர் உங்களுடைய காதில் உள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் தோலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் காதுகளில் உள்ள சீரற்ற மற்றும் உலர்ந்த சருமத்தை நீக்க உதவும் வைட்டமின் ஈ மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அதிக அளவில் உள்ளன.
உங்களுடைய உள்ளங்கையில் ஒரு சில துளிகள் பாதம் எண்ணெய் எடுத்து அதை உங்களுடைய காதைச் சுற்றி தடவி மற்றும் மெதுவாக மசாஜ் செய்து ஒரு நாள் இரவு முழுவதும் உலர விடுங்கள். இந்த சிகிச்சையை ஒரு நாளைக்கு ஒரு முறை மேற்கொள்ளுங்கள்.

ஷியா வெண்ணெய்
தூய ஷியா வெண்ணெயை ஒரு சிட்டிகை எடுத்து காதைச் சுற்றி தடவ வேண்டும். இது உங்களின் காதுகளில் உள்ள உலர்ந்த மற்றும் சீரற்ற வெள்ளை தோல்களை சீராக்க உதவும்.
இதனுடைய ஆழ்ந்த களிம்பு பண்புகள் காதுகளில் உள்ள வெள்ளை செதில்களை குணப்படுத்துகின்றது. ஒரு நாளைக்கு இரு முறை இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது இந்த வெண்ணெய் இயற்கையாக உறிஞ்சப்பட அனுமதிக்க வேண்டும்.

ஈரமான துணி
வெள்ளை செதில்கள் உள் காது பகுதிகளில் மீண்டும் உருவாவதை தடுக்க காதின் மேற்பகுதியில் உள்ள மேலோடு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்க வேண்டும்.
மிதமான வெந்னீரில் ஒரு மெல்லிய இழை துணியை தோய்த்து அதைப் பிழிந்து பின்னர் மிகவும் மெதுவாக காது மற்றும் அதைச் சுற்றி உள்ள மேலோடு மற்றும் செதில்களை தடவி நீக்க வேண்டும்.
உங்களுடைய உள் காது பகுதியில் மிக ஆழமாக துணியை நுழைக்க வேண்டாம். இதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications