Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்
கண்பார்வை தெளிவடையும்
சிறுவயது முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலைக்கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணமடையும்.
மக்கட் பேறு ஏற்படும்
உடலில் புதிய ரத்தம் உண்டாகி நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்தமல்லிக்கீரையை நெய்யில் வதக்கி துவையல் போல சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலம் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். தினசரி மல்லிக்கீரையைச் சாப்பிட்டு வர எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் பலசாலியாக வாழலாம்.
கொத்தமல்லிக்கீரையை தினசரி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் தாது விருத்தி அடையும். மக்கட் பேறுக்கு வழிகிடைக்கும்.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரிக்கத் தொடங்கிய மாதத்தில் இருந்து கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து வர வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தையில் எலும்புகளும், பற்களும் உறுதியடையும். சொறி, சிரங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்காது.
வயிற்றுப்புண் குணமடையும்
வயிற்றில் புண் இருந்து அதன் மூலம் அடிக்கடி வலி ஏற்படுபவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இதனால் புண் ஆறி வயிற்று வலி குணமடையும்.
வாய், உதடு போன்றவற்றில் சிறு புண் ஏற்பட்டிருந்தாலும் கொத்தமல்லியை துவையல் செய்து உட்கொண்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்
மூக்கு தொடர்புடைய நோய்கள்
பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற நோயினால் சிரமப்படுபவர்கள் கொத்தமல்லித் துவையலை உணவில் சேர்த்து உட்கொள்ளவேண்டும். இதனால் மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.
தோல் நோய்கள் குணமாக்குவதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. சொறி, சிரங்கு, புண் போன்றவைகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு வந்தாலும் தினசரி கொத்து மல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர அவை சீக்கிரம் குணமடையும்.