Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
கண்ணுக்கு ஒளிதரும் பிரம்ம தண்டுப் பூக்கள்
இயற்கையின் படைப்பில் எண்ணற்ற அதிசயங்கள் ஒளிந்துள்ளன. நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், என பஞ்ச பூதங்களும் மனிதர்களுக்கு தேவையான மகத்தான சக்தியை அளிக்கின்றன. அதுபோல தாவரங்களும் இலைமுதல் வேர் வரை மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை போக்கும் மகத்தான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாவரங்களில் பூக்கும் பூக்கள் காய்த்து, கனிந்து, விதைகளை பரப்பி மீண்டும் தாவரங்களின் குடும்பத்தை பரப்பும் மகத்தான செயல்களை செய்பவையாகும்.அந்த பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்
பிரம்மதண்டுப் பூக்கள்
பிரம்ம தண்டு என்று என்பது முள்ளங்கி போன்ற இலைகளும், இலைகளில் ஏராளமான முட்களும் காணப்படும். இது சிறு செடியாகும். மஞ்சள் நிறப்பூக்கள் காணப்படும் இந்த செடியை உடைத்தால் மஞ்சள் நிற பால் வெளி வரும். இச்செடியின் பூக்களில் 10 எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் இரவு நேரத்தில் ஊற வைக்கவும். காலை நேரத்தில் அந்தப் பூக்களை நீக்கிவிட்டு அந்த நீரில் கண்களை கழுவி வர பார்வை தெளிவு கிடைக்கும்.
பருத்திப்பூக்கள்
பருத்திச் செடிகள் உடைகளுக்கு தேவையான பஞ்சினை உற்பத்தி செய்கின்றன. இந்த செடியில் பூக்கும் பூக்கள் தோல் நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகின்றன. நான்கு பருத்திப்பூக்களை பறித்து அவற்றுடன் பருத்திச் செடியின் பட்டையை வைத்து அரைத்து பாதிக்கப்பட்ட தோல்மீது தடவி வர தோல் நோய் குணமடையும்.
சப்பாத்திப்பூக்கள்
நீரின்றி வளரும் தாவரமான சப்பாத்திக்கள்ளி செடியில் பூக்கும் பூக்கள் சூடு கட்டிகளை குணப்படுத்த ஏற்றது. உடலில் கட்டி அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் சப்பாத்திக் கள்ளிப்பூக்களை பறித்து அம்மியில் அரைத்து கட்டிகள் மீது பூசி வர கட்டிகள் உடைந்து விடும் கரைந்துவிடும்.
சிறுநாகப்பூ
நீரிழிவு நோயாளிகள் கால் எரிச்சலால் அவதிப்படுவர். இந்த எரிச்சலை போக்குவதில் சிறுநாகப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்ந்த சிறுநாகப்பூக்களை நெய்விட்டு அரைத்து கால் எரிச்சல் உள்ள இடங்களில் பூசினால் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











