Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
கண்ணுக்கு ஒளிதரும் பிரம்ம தண்டுப் பூக்கள்
இயற்கையின் படைப்பில் எண்ணற்ற அதிசயங்கள் ஒளிந்துள்ளன. நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், என பஞ்ச பூதங்களும் மனிதர்களுக்கு தேவையான மகத்தான சக்தியை அளிக்கின்றன. அதுபோல தாவரங்களும் இலைமுதல் வேர் வரை மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை போக்கும் மகத்தான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாவரங்களில் பூக்கும் பூக்கள் காய்த்து, கனிந்து, விதைகளை பரப்பி மீண்டும் தாவரங்களின் குடும்பத்தை பரப்பும் மகத்தான செயல்களை செய்பவையாகும்.அந்த பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்
பிரம்மதண்டுப் பூக்கள்
பிரம்ம தண்டு என்று என்பது முள்ளங்கி போன்ற இலைகளும், இலைகளில் ஏராளமான முட்களும் காணப்படும். இது சிறு செடியாகும். மஞ்சள் நிறப்பூக்கள் காணப்படும் இந்த செடியை உடைத்தால் மஞ்சள் நிற பால் வெளி வரும். இச்செடியின் பூக்களில் 10 எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் இரவு நேரத்தில் ஊற வைக்கவும். காலை நேரத்தில் அந்தப் பூக்களை நீக்கிவிட்டு அந்த நீரில் கண்களை கழுவி வர பார்வை தெளிவு கிடைக்கும்.
பருத்திப்பூக்கள்
பருத்திச் செடிகள் உடைகளுக்கு தேவையான பஞ்சினை உற்பத்தி செய்கின்றன. இந்த செடியில் பூக்கும் பூக்கள் தோல் நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகின்றன. நான்கு பருத்திப்பூக்களை பறித்து அவற்றுடன் பருத்திச் செடியின் பட்டையை வைத்து அரைத்து பாதிக்கப்பட்ட தோல்மீது தடவி வர தோல் நோய் குணமடையும்.
சப்பாத்திப்பூக்கள்
நீரின்றி வளரும் தாவரமான சப்பாத்திக்கள்ளி செடியில் பூக்கும் பூக்கள் சூடு கட்டிகளை குணப்படுத்த ஏற்றது. உடலில் கட்டி அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் சப்பாத்திக் கள்ளிப்பூக்களை பறித்து அம்மியில் அரைத்து கட்டிகள் மீது பூசி வர கட்டிகள் உடைந்து விடும் கரைந்துவிடும்.
சிறுநாகப்பூ
நீரிழிவு நோயாளிகள் கால் எரிச்சலால் அவதிப்படுவர். இந்த எரிச்சலை போக்குவதில் சிறுநாகப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்ந்த சிறுநாகப்பூக்களை நெய்விட்டு அரைத்து கால் எரிச்சல் உள்ள இடங்களில் பூசினால் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications