Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
தினமும் இத்தனை பேரீச்சை பழத்துக்கு மேல் சாப்பிடுவது உங்களுக்கு நிறைய ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை!
ஆரோக்கிய உணவுகள் என்று வரும்போது அதில் பேரீட்சை பழத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு. இரும்புச்சத்தை அதிகரிப்பது முதல் இரத்த உற்பத்தியைத் தூண்டுவது வரை பேரீச்சம் பழம் பல அத்தியாவசிய நன்மைகளை வழங்குகிறது.பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது, அவற்றை உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது
பேரீச்சை பழம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன, சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன, மேலும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டுக்குத் தேவையான ஆற்றலை தருகின்றன. 'அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று கூறுவது பேரீச்சம் பழத்திக்கும் பொருந்தும். இருப்பினும், ஒரு நாளைக்கு ஐந்து பேரீச்சம்பழங்களுக்கு மேல் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் பேரீச்சம்பழத்தில் அதிக இயற்கை சர்க்கரை மற்றும் கலோரி உள்ளடக்கம் உள்ளது.

பேரீச்சம்பழங்களை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படலாம், இது அவர்களின் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில ஆபத்துக்களை அதிகரிக்கும். எதிர்மறை விளைவுகளின் அபாயத்தைத் தடுக்க, மிதமான அளவில் சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு ஐந்து பேரீச்சம் பழத்திற்கு மேல் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமாவின் அறிகுறிகளை மோசமாக்கும்
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்துமா உள்ளவர்களில் ஏறத்தாழ 80% பேர், பேரீச்சம் பழங்களில் உள்ள ரசாயனங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.
எடை வேகமாக அதிகரிக்கலாம்
பேரீச்சம்பழங்களில் இயற்கையான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இது அதிக கலோரிகள் மற்றும் ஆற்றல் அடர்த்தி கொண்டது, மேலும் அவற்றின் நடுத்தர ஆற்றல் அடர்த்தி ஒரு கிராமுக்கு 2.8 கலோரிகள் இருப்பதால் பேரீச்சை பழத்தை அதிகம் சாப்பிடுவது எடையை அதிகரிக்கலாம்.
வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்
பேரீச்சம்பழங்களில் சல்பைட்டுகள் இருப்பதால் அவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும், இது வாயுப் பிரச்சினை, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பேரீச்சை நார்ச்சத்துக்களின் அற்புதமான ஆதாரமாக இருந்தாலும், அவற்றை அதிகமாகவோ அல்லது தவறான வழியிலோ உட்கொண்டால், அவை வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
ஹைபர்கேலீமியாவுக்கு வழிவகுக்கும்
இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாகும் போது அது ஹைபர்கேலீமியா என்ற நிலையை ஏற்படுத்துகிறது, பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இந்த நிலையை மோசமாக்கும். எனவே பொட்டாசியம் நிறைந்த பேரீச்சை பழம் போன்ற உணவுகளை மிதமாக உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தைகளுக்கு ஏற்றதல்ல
பேரீச்சம் பழங்கள் தடிமனாகவும் குழந்தைகளுக்கு மெல்லுவதற்கு சவாலாகவும் இருக்கும், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இவை பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். அவர்களின் வளரும் குடல் காரணமாக, பேரீச்சம்பழங்களை ஜீரணிக்க கடினமாக உள்ளது, இது ஜீரண சிக்கல்களை ஏற்படுத்தலாம் மற்றும் மூச்சுக்குழாயை அடைக்கக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
