Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
தினமும் இத்தனை பேரீச்சை பழத்துக்கு மேல் சாப்பிடுவது உங்களுக்கு நிறைய ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை!
ஆரோக்கிய உணவுகள் என்று வரும்போது அதில் பேரீட்சை பழத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு. இரும்புச்சத்தை அதிகரிப்பது முதல் இரத்த உற்பத்தியைத் தூண்டுவது வரை பேரீச்சம் பழம் பல அத்தியாவசிய நன்மைகளை வழங்குகிறது.பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது, அவற்றை உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது
பேரீச்சை பழம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன, சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன, மேலும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டுக்குத் தேவையான ஆற்றலை தருகின்றன. 'அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்று கூறுவது பேரீச்சம் பழத்திக்கும் பொருந்தும். இருப்பினும், ஒரு நாளைக்கு ஐந்து பேரீச்சம்பழங்களுக்கு மேல் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் பேரீச்சம்பழத்தில் அதிக இயற்கை சர்க்கரை மற்றும் கலோரி உள்ளடக்கம் உள்ளது.

பேரீச்சம்பழங்களை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படலாம், இது அவர்களின் எடையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில ஆபத்துக்களை அதிகரிக்கும். எதிர்மறை விளைவுகளின் அபாயத்தைத் தடுக்க, மிதமான அளவில் சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு ஐந்து பேரீச்சம் பழத்திற்கு மேல் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமாவின் அறிகுறிகளை மோசமாக்கும்
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பேரீச்சம்பழம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்துமா உள்ளவர்களில் ஏறத்தாழ 80% பேர், பேரீச்சம் பழங்களில் உள்ள ரசாயனங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.
எடை வேகமாக அதிகரிக்கலாம்
பேரீச்சம்பழங்களில் இயற்கையான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இது அதிக கலோரிகள் மற்றும் ஆற்றல் அடர்த்தி கொண்டது, மேலும் அவற்றின் நடுத்தர ஆற்றல் அடர்த்தி ஒரு கிராமுக்கு 2.8 கலோரிகள் இருப்பதால் பேரீச்சை பழத்தை அதிகம் சாப்பிடுவது எடையை அதிகரிக்கலாம்.
வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்
பேரீச்சம்பழங்களில் சல்பைட்டுகள் இருப்பதால் அவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும், இது வாயுப் பிரச்சினை, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பேரீச்சை நார்ச்சத்துக்களின் அற்புதமான ஆதாரமாக இருந்தாலும், அவற்றை அதிகமாகவோ அல்லது தவறான வழியிலோ உட்கொண்டால், அவை வீக்கம் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
ஹைபர்கேலீமியாவுக்கு வழிவகுக்கும்
இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாகும் போது அது ஹைபர்கேலீமியா என்ற நிலையை ஏற்படுத்துகிறது, பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இந்த நிலையை மோசமாக்கும். எனவே பொட்டாசியம் நிறைந்த பேரீச்சை பழம் போன்ற உணவுகளை மிதமாக உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தைகளுக்கு ஏற்றதல்ல
பேரீச்சம் பழங்கள் தடிமனாகவும் குழந்தைகளுக்கு மெல்லுவதற்கு சவாலாகவும் இருக்கும், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு இவை பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். அவர்களின் வளரும் குடல் காரணமாக, பேரீச்சம்பழங்களை ஜீரணிக்க கடினமாக உள்ளது, இது ஜீரண சிக்கல்களை ஏற்படுத்தலாம் மற்றும் மூச்சுக்குழாயை அடைக்கக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
