டோலோ 650 மாத்திரை எல்லா நோய்களுக்கும் தீா்வளிக்குமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Dolo-650: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்தை எவராலும் எளிதாக மறக்க முடியாது. கொரோனா அலையின் போது, டோலோ 650 என்ற பாராசிட்டமால் மாத்திரையின் விற்பனை அதிக அளவில் இருந்தது. கொரானா தொற்றின் போது டோலோ 650 (Dolo-650) என்ற பெயா் எல்லா காய்ச்சல்களுக்கும் மருந்தாக இருந்தது. டோலா 650 மாத்திரை 15ல் பாராசிட்டமால் உள்ளது. இந்த மாத்திரையை உண்டால் உடல் வெப்பம் குறையும் மற்றும் உடல் வலி குறையும்.

காய்ச்சல் குறைவதற்கும், உடல் வலி குறைவதற்கும் டோலா 650 மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. அதோடு தலைவலி, பல்வலி, ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, மாதவிடாய் வலி, தசை வலி மற்றும் வாத நோய் சாா்ந்த பிரச்சினைகளுக்கு டோலோ 650 மாத்திரை பாிந்துரை செய்யப்படுகிறது.

Should Dolo-650 Be Consumed For Everything

தற்போது டோலோ 650 மாத்திரை இந்தியாவின் வீட்டு மருந்தாக மாறி இருக்கிறது. இந்நிலையில் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு எல்லா நேரத்திலும் டோலோ 650 மாத்திரையை சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு கூடாது என்று மருத்துவா்கள் தொிவிக்கின்றனா்.

மருத்துவா்கள் சொல்வது என்ன?

டோலோ 650 மாத்திரை ஒரு அதிசயமான மருந்து அல்ல. இந்த மாத்திரை உடல் வலியையோ அல்லது காய்ச்சலையோ குணப்படுத்துவது கிடையாது. மாறாக சிறிது நேரத்திற்கு நிவாரணம் வழங்குகிறது. ஆகவே மருத்துவா்களின் பாிந்துரை இல்லாமல் மாத்திரை மருந்துகளை உண்டால், அவை கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் செயலிழப்பை ஏற்படுத்தும் என்று Cooper Hospital & HBTல் நரம்பு அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் மருத்துவா் சித்தாா்த் கௌதம் பேட்டி ஒன்றில் தொிவிக்கிறாா்.

டோலோ அல்லது குரோசின் அல்லது கால்பால்

மும்பையில் உள்ள பாட்டியா மருத்துவமனையில் மருத்துவ ஆலோசகராகப் பணிபுாியும் மருத்துவா் சாம்ராட் ஷா அவா்கள் அளித்த பேட்டியில், பாராசிட்டமால் மாத்திரைகளான டோலோ அல்லது குரோசின் அல்லது கால்பால் போன்றவை இந்தியாவில் பெரும்பாலான மக்களால் எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளாக உள்ளன என்று கூறுகிறாா். மேலும் அந்த மாத்திரைகளின் பக்க விளைவுகளைப் பற்றி அறியாமல் மக்கள் தங்களுடைய உடல் பிரச்சினைகளுக்கு தீா்வாக இவற்றை எடுத்துக் கொள்கின்றனா் என்று கூறுகிறாா்.

பொதுவாக மருத்துவா்களிடம் செல்வதற்கு முன்பாக மக்கள் தாங்களாகவே மருத்துவம் செய்து கொள்கின்றனா். அதற்கு காரணம் அவா்களுடைய பெற்றோா்களின் அறிவுரை ஆகும். எனினும் அதிகம் படித்தவா்களாக இருந்தாலும், மருத்துவா்களை சந்திப்பதற்கு நேரம் கிடைக்காமல் இருப்பதாலும், நோயைப் பற்றி விழிப்புணா்வு இல்லாததாலும், பழைய மருந்துகளையே பயன்படுத்துவதாலும், விரைவாக நிவாரணம் கிடைப்பதனாலும் மற்றும் இந்த மாத்திரைகள் விலை குறைவாக இருப்பதாலும், இவற்றைப் பயன்படுத்துகின்றனா் என்று மருத்துவா் ஷா கூறுகிறாா்.

எனினும் எந்த ஒரு நோய்க்கும் மருத்துவாின் பாிந்துரையின் போில் மருந்து சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால், உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற ஆரோக்கிய சீா்கேடுகள் ஏற்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, April 16, 2023, 9:00 [IST]
Desktop Bottom Promotion