Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா... அதுக்கு இந்த புதிய வைரஸ் தான் காரணமாம்.. உஷார்.
New Covid Variant JN1: கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று முழுமையாக சந்தோஷப்படுவதற்குள், மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் இந்த புதிய வகை கொரோனா வைரஸானது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
கொரோனா வைரஸின் கடைசி வகை தான் பைரோலா அல்லது BA.2.86. இந்த வைரஸ் தற்போது உருமாற்றமடைந்துள்ளது. அதாவது இந்த வைரஸின் ஒரு புதிய ஸ்பைக் புரோட்டீனில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய வகை கொரோனா வைரஸிற்கு JN.1 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள புதிய பிறழ்வால் இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் JN.1 மாறுபாடு குறித்து பலரது மனதில் எழும் கேள்விகளுக்கான விடைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்றால் என்ன?
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்பது ஒமிக்ரானின் வகையைச் சேர்ந்த BA.2.86-ன் புதிய மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிறழ்வினால் இந்த வகை வேகமாக பரவும் திறன் கொண்டது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒரு காரணத்தினால் இந்த மாறுபாடு ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இந்த மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
JN.1 எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த புதிய வகை JN.1 மாறுபாடு முதன்முதலாக 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த புதிய மாறுபாட்டினால் இதுவரை அமெரிக்காவில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளில் 15-29 சதவீத வழக்குகள் இந்த மாறுபாட்டினால் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வேகமாக பரவும் திறனைக் கொண்டிருந்தாலும், இந்த வகை கொரோனாவில் உயிர்சேதம் எதுவும் இல்லை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் மோசமாக இல்லை என்றும் அமெரிக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
JN.1 மாறுபாடு இந்தியாவில் உள்ளதா? எத்தனை கொரோனா வழக்குகள் இதுவரை உள்ளன?
அறிக்கைகளின் படி, இந்த புதிய கோவிட் மாறுபாடான JN.1 பிறழ்வானது முதன்முதலாக கேரளாவில் டிசம்பர் 13 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) கேரளாவில் அதன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் கொரோனாவின் வழக்குகள் அதிகரித்து வருவதற்கு இந்த JN.1 மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று தேசிய இந்திய மருத்துவ சங்க கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் மொத்தம் 1,296 கொரோனா வழக்குகள் உள்ளன.
JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
இந்த புதிய JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் மற்ற மாறுபாடுகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. இதுவரை உள்ள அனைத்து கொரோனா மாறுபாடுகளின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளைத் தான் கொண்டிருந்தன. அதேப் போல் தான் இந்த புதிய மாறுபாட்டின் அறிகுறிகளும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் காய்ச்சல், மூக்கு ஒழுகல், தொண்டை புண், தலை வலி, ஆகியவை கொரோனாவின் முக்கியமான அறிகுறிகளாகும்.
மேலும் இந்த வைரஸ் மாறுபாடு குறித்து அதிகம் தெரியாது என்பதாலும், இதன் வேகமாக பரவும் திறன் காரணமாகவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த JN.1 மாறுபாடு குறித்து கவலைப்பட வேண்டுமா?
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். ஆனால் இப்படிப்பட்ட தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் திறனை இந்த JN.1 மாறுபாடு கொண்டிருப்பதால், இது கவலைப்பட வேண்டிய ஒரு விகாரம்.
இருப்பினும், இந்த மாறுபாடு உலகில் தோன்றி 3 மாதங்கள் ஆகியிருந்தும், இன்னும் இந்த மாறுபாட்டினால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும், நாம் சுத்தமாக இருப்போம், கொரோனாவில் இருந்து நம்மை காப்போம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











