Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா... அதுக்கு இந்த புதிய வைரஸ் தான் காரணமாம்.. உஷார்.
New Covid Variant JN1: கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று முழுமையாக சந்தோஷப்படுவதற்குள், மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் இந்த புதிய வகை கொரோனா வைரஸானது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
கொரோனா வைரஸின் கடைசி வகை தான் பைரோலா அல்லது BA.2.86. இந்த வைரஸ் தற்போது உருமாற்றமடைந்துள்ளது. அதாவது இந்த வைரஸின் ஒரு புதிய ஸ்பைக் புரோட்டீனில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய வகை கொரோனா வைரஸிற்கு JN.1 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள புதிய பிறழ்வால் இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் JN.1 மாறுபாடு குறித்து பலரது மனதில் எழும் கேள்விகளுக்கான விடைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்றால் என்ன?
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்பது ஒமிக்ரானின் வகையைச் சேர்ந்த BA.2.86-ன் புதிய மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிறழ்வினால் இந்த வகை வேகமாக பரவும் திறன் கொண்டது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒரு காரணத்தினால் இந்த மாறுபாடு ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இந்த மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
JN.1 எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த புதிய வகை JN.1 மாறுபாடு முதன்முதலாக 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த புதிய மாறுபாட்டினால் இதுவரை அமெரிக்காவில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளில் 15-29 சதவீத வழக்குகள் இந்த மாறுபாட்டினால் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வேகமாக பரவும் திறனைக் கொண்டிருந்தாலும், இந்த வகை கொரோனாவில் உயிர்சேதம் எதுவும் இல்லை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் மோசமாக இல்லை என்றும் அமெரிக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
JN.1 மாறுபாடு இந்தியாவில் உள்ளதா? எத்தனை கொரோனா வழக்குகள் இதுவரை உள்ளன?
அறிக்கைகளின் படி, இந்த புதிய கோவிட் மாறுபாடான JN.1 பிறழ்வானது முதன்முதலாக கேரளாவில் டிசம்பர் 13 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) கேரளாவில் அதன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் கொரோனாவின் வழக்குகள் அதிகரித்து வருவதற்கு இந்த JN.1 மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று தேசிய இந்திய மருத்துவ சங்க கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் மொத்தம் 1,296 கொரோனா வழக்குகள் உள்ளன.
JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
இந்த புதிய JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் மற்ற மாறுபாடுகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. இதுவரை உள்ள அனைத்து கொரோனா மாறுபாடுகளின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளைத் தான் கொண்டிருந்தன. அதேப் போல் தான் இந்த புதிய மாறுபாட்டின் அறிகுறிகளும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் காய்ச்சல், மூக்கு ஒழுகல், தொண்டை புண், தலை வலி, ஆகியவை கொரோனாவின் முக்கியமான அறிகுறிகளாகும்.
மேலும் இந்த வைரஸ் மாறுபாடு குறித்து அதிகம் தெரியாது என்பதாலும், இதன் வேகமாக பரவும் திறன் காரணமாகவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த JN.1 மாறுபாடு குறித்து கவலைப்பட வேண்டுமா?
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். ஆனால் இப்படிப்பட்ட தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் திறனை இந்த JN.1 மாறுபாடு கொண்டிருப்பதால், இது கவலைப்பட வேண்டிய ஒரு விகாரம்.
இருப்பினும், இந்த மாறுபாடு உலகில் தோன்றி 3 மாதங்கள் ஆகியிருந்தும், இன்னும் இந்த மாறுபாட்டினால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும், நாம் சுத்தமாக இருப்போம், கொரோனாவில் இருந்து நம்மை காப்போம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications