Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
கேன்சர் பத்தி நீங்கள் நம்புற இந்த விஷயம் எல்லாமே கட்டுக்கதையாம்... இனிமே இந்த விஷயங்கள நம்பாதீங்க...!
உலகளவில் அதிகளவு இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக புற்றுநோய் உள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களையும், அவர்களின் அரபா வாழ்க்கையும் புற்றுநோய் பாதிக்கிறது. National Cancer Institute கருத்துப்படி, "100க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் உள்ளன", மேலும் மருத்துவம் பெருமளவில் முன்னேறியுள்ள போதிலும், புற்றுநோய் பயம், குழப்பம் மற்றும் தவறான நம்பிக்கைகளுக்கு வழிவகுக்கும் கட்டுக்கதைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த கட்டுக்கதைகள் பயத்தை மட்டும் பரப்புவதில்லை, ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மன உறுதியை கடுமையாகப் பாதிக்கிறது. நோயாளிகள் தவறாக வழிநடத்தப்படாமலும், நம்பிக்கையை இழக்காமலும் இருக்க இந்த ஆபத்தான நோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை உடைப்பது முக்கியம்.

புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம்
புற்றுநோயைச் சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான கட்டுக்கதைகளில் ஒன்று, அது எப்போதும் மரணத்தை ஏற்படுத்தும் என்பதாகும். இந்த தவறான கருத்து புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக அவர்கள் வாழ்வில் இருண்ட சூழல் ஏற்படுகிறது.
ஆனால், உண்மையில் புற்றுநோயின் பாதிப்பு, புற்றுநோயைக் கண்டறிவதன் விளைவு, புற்றுநோயின் வகை, அது கண்டறியப்பட்ட நிலை மற்றும் தனிநபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.
பல புற்றுநோய்கள், குறிப்பாக ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவை சிகிச்சையளிக்கக்கூடியவை. மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்கள் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கான உயிர்வாழ்வு விகிதங்களை மேம்படுத்தியுள்ளன. கூடுதலாக, தோல் அல்லது தைராய்டு புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்கள், அவற்றின் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படும்போது அவற்றை குணப்படுத்துவது எளிது.
புற்றுநோய் பரவக்கூடியது
மற்றொரு பொதுவான மூடநம்பிக்கை என்னவென்றால், சளி அல்லது காய்ச்சல் போன்ற உடல் தொடர்பு மூலம் புற்றுநோயானது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது. புற்றுநோய் என்பது ஒரு தனிநபரின் உடலில் உள்ள அசாதாரண உயிரணு வளர்ச்சியின் விளைவாகும் மற்றும் புற்றுநோயாளியின் வெளிப்பாட்டினால் ஏற்படுவதில்லை.
ஒருவரின் உயிரணுக்களுக்குள் மரபணு மாற்றங்கள் குவிந்து, கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் கட்டிகள் உருவாவதற்கு வழிவகுக்கும் போது இது உருவாகலாம். இந்த பிறழ்வுகள் தொற்றுநோய் அல்ல மற்றும் சாதாரண தொடர்பு மூலம் மற்றவர்களுக்கு பரவ முடியாது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது
புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான மூடநம்பிக்கை என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. உண்மையில், சிலர் விலையுயர்ந்த சிகிச்சைகளைப் பெறுவதற்குப் பதிலாக முதுமை காரணமாக அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஆனால் இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.
ஒருவர் புற்றுநோய் சிகிச்சை பெறுகிறாரா இல்லையா என்பதை வயது மட்டும் தீர்மானிக்காது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு புற்றுநோய் அறிகுறிகள் அதிகரிக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், உடல்நலப் பராமரிப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், முதியவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உயிர்வாழும் விகிதத்தை அதிகரிக்கக்கூடிய பயனுள்ள சிகிச்சைகளைப் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளது. உண்மையில், பல வயதானவர்கள் புற்றுநோய் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, நிறைவான வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறையால் புற்றுநோயை குணப்படுத்த முடியும்
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை அனைவருக்கும் கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்டாலும், அது புற்றுநோயை குணப்படுத்தும் என்பது ஒரு கட்டுக்கதையாகும், இது சிகிச்சை பற்றிய ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்கும். சீரான உணவு, போதுமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோய் தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய கூறுகளாக இருந்தாலும், அவை வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.
புற்றுநோய் சிகிச்சையானது பொதுவாக அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி அல்லது புற்றுநோயின் வகை மற்றும் அதன் பாதிப்பைப் பொறுத்து வேறு சில சிகிச்சையின் கலவையை உள்ளடக்கியது.
இந்த சிகிச்சைகள் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் உருவாக்கப்பட்டு புற்றுநோய் செல்களை நேரடியாக குறிவைத்து அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவுமுறை மாற்றங்கள் அல்லது மாற்று சிகிச்சை முறைகளை மட்டுமே நம்பியிருப்பது பயனற்றதாகவும், வேகமாக வளரும் புற்றுநோய் செல்கள் வடிவில் தனிநபரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அனைத்து கட்டிகளும் புற்றுநோய்
அனைத்து கட்டிகளும் புற்றுநோய் அல்ல. மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சுய பரிசோதனை மூலம் கட்டிகளைக் கண்டறிவது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது ஓரளவு மட்டுமே உண்மை. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கருத்துப்படி, "மார்பகத்தில் உள்ள கட்டிகள் எப்போதும் புற்றுநோயாக இருக்காது. 10% முதல் 20% கட்டிகள் புற்றுநோயாகும். மீதமுள்ளவை தீங்கற்றவை. "
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












