Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
எச்சரிக்கை! மீண்டும் கே.எப்.சி சிக்கனில் புதிய கலப்படம் கண்டுபிடிப்பு... அதுவும் தமிழ்நாட்டில் தானாம்...
Magnesium Silicate Found In KFC Chicken: சமீப காலமாக கடைகளில் விற்கப்படும் உணவுகளில் கலப்படம் அதிகம் செய்யப்படுவதாக செய்தி வந்தவாறு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபலமான கே.எப்.சி சிக்கன் கடையில் மக்னீசியம் சிலிகேட் சிந்தெடிக் பயன்படுத்தப்பட்டு வந்ததையடுத்து, தூத்துக்குடி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, கடையின் உரிமத்தை ரத்த செய்துள்ளனர்.
உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு சிக்கன் தான் கே.எப்.சி சிக்கன். இந்த சிக்கன் கடை இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். ஏனெனில் இந்த சிக்கனுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. முக்கியமாக இன்றைய தலைமுறையினர் அதிகம் சாப்பிடக்கூடியது இந்த கே.எப்.சி சிக்கனைத் தான். இந்த சிக்கன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், அதன் ருசியால் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் இன்று வரை உட்கொண்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூத்துக்குடியில் உள்ள கே.எப்.சி சிக்கன் கடையில், சிக்கனைப் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயில் மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற கெமிக்கல் கலப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் இந்த கெமிக்கலானது கெட்டுப் போன எண்ணெய் சுத்திகரிக்க பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது இந்த கடையில் இருந்து 18 கிலோ மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக், 45 லிட்டர் கெட்டுப்போன சமையல் எண்ணெய் மற்றும் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்றால் என்ன? இது எங்கு பயன்படுத்தக்கூடியது, இதை உட்கொள்வதால் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது காண்போம்.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்றால் என்ன?
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்பது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் ஒரு ஆபத்தான கனிம பொருளாகும். இது வெள்ளை நிறத்தில், மணம் ஏதும் இல்லாமல் இருக்கும். முக்கியமாக இது நீரில் எளிதில் கரைந்துவிடும். இந்தியாவில் உணவுப் பொருட்களில் இதன் பயன்பாடு FSSAI ஆல் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மக்னீசியம் சிலிகேட் மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நீண்ட காலமாக கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பயன்படுகிறது.
உணவுகளில் எதனால் பயன்படுத்தப்படுகிறது?
மக்னீசியம் சிலிகேட் உணவுகளை மொறுமொறுப்பாக வைத்திருக்கும் என்பதால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுகள் ஒன்றாக ஒட்டிக் கொள்வதைத் தடுக்கவும், உணவின் அமைப்பை பராமரிக்கவும், இந்த கெமிக்கல் அடிக்கடி உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இந்த மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் உலகெங்கிலும் பல பகுதிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படடாலும், இந்தியாவில் மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக்கை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கெமிக்கலை மிகச்சிய அளவில் உணவில் பயன்படுத்தினால் பாதுகாப்பானது, ஆனால் அதிகமாக பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கை விளைவிக்கும்.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக்கை அதிகமாக பயன்படுத்தினால் அது ஆரோக்கியத்தை அழித்துவிடும். அதுவும் இதை சுவாசித்தால் சுவாசக்குழாயில் அழற்சி ஏற்படலாம். இதன் விளைவாக இருமல், தொண்டை புண், முச்சுத்திணறல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதிகளவில் உட்கொள்ளும் போது குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
குறிப்பு: என்ன தான், இந்த நிகழ்வு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் கிளைகள் அதிகம் உள்ளன. எங்கு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே மக்களே! உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், கடைகளில் விற்கப்படும் உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து, முடிந்த வரை வீட்டிலேயே வேண்டியதை சமைத்து சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











