Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இரவு நேரத்தில் சாதம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? - உண்மை என்ன?
Rice At Night In Tamil: சாதம் இந்தியாவின் மிகவும் முக்கியமான உணவாகும். இந்திய மக்களால் சாதம் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாதத்தை சாப்பிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பசி அடங்காது. அப்படிப்பட்ட சாதத்தை பெரும்பாலும் மதிய வேளையில் தான் சமைத்து சாப்பிடுவோம்.
ஒருவேளை மதியம் சமைத்த சாதம் மீந்து போனால், அதை இரவு நேரத்தை வைத்து சாப்பிடுவோம். ஆனால் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடக்கூடாது என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. அது உண்மை தானா? எதனால் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடக்கூடாது என்பதற்கான உண்மையான காரணத்தை இக்கட்டுரையில் காண்போம்.

சாதத்தில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் இவை எளிதில் உடைந்து ஜீரணமாகிவிடும். அதனால் சாதம் மிகவும் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சாதமானது எளிதில் உடைந்துவிடுவதால், இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். அதனால் தான் சாதத்தை உண்ட பின் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
அதே சமயம் சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. இந்த கார்போஹைட்ரேட்டுகள் உடலால் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது உடலில் கொழுப்புக்களாக தேங்கி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
இப்படிப்பட்ட சாதத்தை பகல் வேளையில் உட்கொண்டால், உடல் செயல்பாடுகளால் கொழுப்புக்களாக தேங்காமல் இருக்கும். அதையே இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
அதுவும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடும் போது, அது எளிதில் ஜீரணிக்கப்பட்டு, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. அதன் பின் சில மணிநேரங்களில் மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து, பசியுடனேயே இருப்பதால் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும்.
சாதம் எளிதில் ஜீரணமாவதால், நிறைய பேர் சாதம் ஒரு சிறந்த இரவு நேர உணவாக நினைக்கிறார்கள். ஆனால் இரவு நேரத்தில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது தான் நல்லது. எனவே இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதுடன் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். அதுவும் முழு கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அது ஜீரணமாக நேரமாகும். இதனால் இரவு முழுவதும் பசியும் எடுக்காது, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
சிலருக்கு சப்பாத்தி ஆகாது. அத்தகையவர்கள் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பதிலாக, சாலட் மற்றும் சூப்புகளை உட்கொள்ளலாம். ஆனால் இந்திய உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், சாதத்தை விட சப்பாத்தியை சாப்பிடுங்கள். முக்கியமாக சாதத்தில் கைக்குத்தல் அரிசி சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம். ஏனெனில் இந்த சாதம் ஜீரணமாக நேரம் எடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் சட்டென அதிகரிக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











