For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பார்வைக் கோளாறு நீங்கி அற்புதமான பார்வைத் திறனை தரும் வாகை மருந்து!!

கண்பார்வைக் கோளாறுகளை நீக்கி, பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்யும் வாகை மரத்தைப் பற்றிய குறிப்புகள் இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

வாகை மரம், பத்தடி உயரத்தில் இருந்து, முப்பது அடி உயரம் வரை, ஓங்கி வளரும் ஒரு, மிகத்தொன்மையான மரமாகும். மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து பெரிய குடையைப் போல காணப்படுவதால், மரத்தின் அடியில் நிழல் நிரந்தரமாக இருக்கும், இதனால், வாகை மரத்தை நிழல் தரும் மரம் என்றும் அழைப்பர்.

சிறிய இலைகளுடன், நறுமணமிக்க அழகிய மலர்களையும், அதிக விதைகள் கூடிய காய்களையும் கொண்ட வாகை மரம், சங்க காலத்தில் இருந்து தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்து இருக்கிறது.

சங்ககாலத்தில் தமிழகப் போர்வீரர்கள், போர்களில் வென்றவுடன், வெற்றியின் சின்னமாக, வாகை மலர்களை சூடிக்கொள்வர், இன்றுவரை, அதைக் குறிக்கும்வகையில், போட்டி, பந்தயங்கள், தேர்தல் இவற்றில் வென்றவர்களை, வெற்றிவாகை சூடினார்கள் என்றே குறிப்பிடுகிறோம்!

தொன்மையான மரங்களை காத்து வருங்கால சந்ததிகள் பயன்பெற, திருக்கோவில்களில் தல மரங்கள் என்ற பெயரில் பாதுகாக்கும் மரங்களில், வாகை மரமும் ஒன்று! மண்ணரிப்பை போக்கும் மரமாகக் கருதப்படும் வாகை மரம், பல நற்பலன்களை மனிதர்க்கும் தருகிறது.

வாகை மரத்தின் இலைகள், மலர்கள், காய்கள், வேர் பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மனிதர்களின் வியாதிகளைப் போக்கும் தன்மை உள்ளவை, வாகையில் கால்சியம், புரதம், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வேதி உப்புகளும் நிறைந்திருக்கின்றன.

வாகை மரத்தின் பொதுப்பயன்களாக, அழற்சி எனும் உடலின் வியாதி பாதித்த செல்களை வெளியேற்றி, உடலை நலம்பெற வைக்கும் தன்மை மிக்கது.
உடலில் தோன்றும் வீக்கங்கள், நெறிக்கட்டிகள் இவற்றைப் போக்குவதில் சிறப்புடன் விளங்குகிறது. ஒவ்வாமையைப் போக்கும். விஷத்தை விலக்கும்.
தொன்மையான வாகை மரமும், தூங்குமூஞ்சி மரமும் ஒன்றல்ல!

சில இடங்களில் வாகை மரங்கள் போன்று காட்சியளிக்கும், நிழல் தரும் தூங்குமூஞ்சி மரத்தை, வாகை மரங்கள் என்று, தவறாக புரிந்துகொள்வர், வாகை மரங்கள் சங்ககாலத்துக்கு முன்பிருந்து நமது தேசத்தில் இருப்பவை, தூங்குமூஞ்சி மரங்கள், இடைக்காலத்தில் வெளி நாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்தவை.
வாகை மரத்தின் இலைகள் மூலம் செய்யப்படும் தேநீர் பற்றி, இப்போது பார்க்கலாம். தேநீர் என்பது, மூலிகைகளைத் தண்ணீரில் இட்டு, தீயில் கொதிக்க வைத்து, பின்னர் பருகும் காய்ச்சிய நீராகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lebbeck tree's health benefits to improve your eye sight

lebbeck tree's health benefits to improve your eye sight
Story first published: Friday, November 10, 2017, 12:30 [IST]
Desktop Bottom Promotion