Latest Updates
-
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
நீங்கள் செய்யும் சிறிய தவறு செரிமானத்தை பாதிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் சாப்பிடதும் நீர் குடிக்கக் கூடாது அதற்கான காரணங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
நன்கு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருப்போம். அப்போது தான் சாப்பிட்டு முடித்த ஒரு உணர்வு கிடைக்கும். ஆனால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது. மேலும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக் கூட வழி வகுக்கும் என்பது தான் உண்மை.
தெரியாதவர்கள் இப்போது தெரிந்துக் கொள்ளுங்கள். செரிமான கோளாறுகளை தூண்டக்கூடிய ஒரே செயல் என்றால் அது சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் தான். இது மிக மோசமான பழக்கமாகும்.
நம் வயிற்றுக்கு நாம் எப்போது உணவு உண்ணுகிறோம் என்று நன்கு தெரியும். அதற்கு ஏற்றவாறு உணவை செரிக்க வைப்பதற்கான அமிலத்தை அது தானாக சுரக்கச் செய்யும். அதுவே தண்ணீர் குடித்தால் உணைவை செரிக்க செய்யும் அமிலத்தின் தன்மை மறைந்துவிடும். பின்பு உணவு செரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

ஆயுர்வேத முறையின் படி வயிற்றில் ஏற்படும் எரிச்சல் செரிமானத் தன்மையை குறிப்பது என்று கூறப்படுகிறது. அதாவது பசி எடுத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சல் சாப்பிட்டினை செரிப்பதற்கு தயார் ஆவதை குறிப்பது என்று தெரியவருகிறது. இந்த தருணத்தில் தண்ணீர் குடிப்பது என்று வயிற்று செயல்களை பாதித்துவிடும்.
இந்தக் கட்டுரையில் சாப்பிட்ட பின் எதற்காக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் இப்போது அவற்றை பற்றி பார்ப்போம்...
வயிற்று உப்புசம்
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்று செரிமான அமிலங்கள் பாதிக்கப்படுவதோடு, உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருந்துவிடும். இந்த செரிக்காத உணவு வாயு தொல்லையை அதிகரித்து, வயிற்று உப்புவத்தை ஏற்படுத்திவிடும்.
செரிமானக் கோளாறு
வயிற்றில் செரிக்காமல் தேங்கி இருக்கும் உணவு ஒரு அசாதாரண உணர்வை ஏற்படுத்தும். மேலும், உடல் செயல்பாடுகளை தெரிதும் பாதித்துவிடும். இந்த செரிக்காத உணவு உடலில் மலச்சிக்கல், வாயுப் பிரச்சனை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை அதிகப்படுத்திவிடும். மேலும், பெரிய பிரச்சனைகளை கூட ஏற்படுத்தும் வாய்ப்பு இதில் உள்ளது.
அசிடிட்டி
சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் அது வயிற்றில் உள்ள அதிலத்தன்மையை நீர்த்து போக செய்துவிடும். இதனால் செரிக்காமல் இருக்காமல் வயிற்றில் இருக்கும் உணவு அதிக நேரம் இருப்பதால், அது வயிற்றில் அதிலத்தை அதிகரித்துவிடும். இது அசிடிட்டியை ஏற்படுத்தி விடும்.
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
செரிக்காத உணவு உடலில் சேரும் போது அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். செரிக்காக உணவு உடலில் அதிக நேரம் தங்குவதால் ஏற்படக்கூடிய விளைவு இது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களே சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூற போதுமானது என்று கருதுகிறோம். சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பது என்பதை விட சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே சிறிது தண்ணீர் குடித்தால் ஆரோக்கியமானதாக அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

