Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
ஃபேஸ்புக் உபயோகிப்பது டீன் ஏஜினருக்கு நல்லதா? கெட்டதா?
ஃபேஸ்பூக், ட்விட்டர் இப்போது பிறந்த குழ்ந்தைகள் கூட உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. சிறு வயதினர் ஃபேஸ்புக் உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைகளை அவ்ர்களின் பெற்றோர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற ஆய்வை பிரிட்டன் மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியமன வாழ்க்கை முறையை சமூக வலைதளங்கள் பாதிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

வெறும் 15 சதவீத பெற்றோர்களே, சமூக வலைதளங்களால், தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் என்று பிர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
40 சதவீத பெற்றோர்கள் சமூக வலைத்தளங்களால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்புகள், எதிர்மறை குணங்கள் காண்ப்படுவதாக, அவற்றை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அதேபோல், மிகக் குறைந்த சதவீதத்தினர், சமூக வலைத்தளங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்மறை எனர்ஜியை தருகிறது என்று கூறுகின்றனர் என்கிறார் தலைமை ஆய்வாளர் ப்ளேய்ர் மொர்கன்.
தவறுகளை மன்னிப்பதும், சுய கட்டுப்பாடும் மிக அவசியம். ஆனால் இவைகள் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் குறைகின்றன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
60 சதவீத பெற்றோர்கள் கூறுவது என்னவென்றால் தங்கள் குழந்தைகளிடம் கோபம் அதிகமாக தென்படுகிறது. அதேபோல், முரட்டுத்தனம், சரியான முடிவுகளை எடுக்க திணறுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் அலட்சியம் , மற்றவர்களின் மேல் வெறுப்புணர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்று தங்கள் பிள்ளைகளின் குணாதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர்.
ஃபேஸ்புக் உபயோகிப்பதால் ஏற்படும் நல்ல விஷயங்கள் என்னவென்றால், மிக முக்கிய 5 மாற்றங்கள் டீன் ஏஜினிரிடம் காணப்படுகிறது. அவை , 1) நகைச்சுவை உணர்வு 2) அழகுணர்ச்சி 3)கற்பனைத் திறன் 4 ) காதல் 5 ) தைரியம் ஆகியவைகள் குழந்தைகளிடம் அதிகரித்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















