Latest Updates
-
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா?
உடல் உஷ்ணத்தை குறைக்கும் தாழம்பூ

தாழம்பூ மணப்பாகினை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாழம்பூவை நீரில் ஊற வைத்து அந்நீரை குடித்து வர வியர்வையை உண்டாக்கும்.
தாழம் பூ செடியின் வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர வெப்ப நோய்கள் தணியும். தாழம் இலையின் விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மில்லி அளவு உட்கொண்டு வர நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு குணமாகும்.
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இப்படி செய்தால் பித்த நோய்களும் தீரும். அதிகளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும். தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
தாழம்பூ தோல்நோய்களை குணமாக்கும். மணப்பாகை தாழம்பூ வேரினைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொண்டு உட்கொண்டு வர சொறி, சிரங்கு, தினவு, தோல் நோய்கள் குணமாகும்.
தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். தாழம்பூ சாம்பலை காயங்களின் மீது பூச புண்கள் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications