Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
முடக்கு வாதத்தை குணமாக்கும் விஷ்ணநாபி !

நாபி தாவரம் இமயமலையின் உச்சிப் பகுதியில் காணப்படுகிறது. ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மையப்பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. ஐந்து அடி உயரம் வரை வளரும் பல பருவ குறுஞ்செடி. தண்டு தரை மீது படரும். கைவடிவிலான இலை மடல் பிளவுற்றவை. மலர்கள் வயலட் அல்லது நீல வண்ணமுடையவை. இதழ்கள் தொப்பி அமைப்பு கொண்டிருப்பதால் கிறிஸ்துவ துறவியர் தொப்பி என்று அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
தாவரத்தில் 0.4 சதவிகிதம் அகோனிடைன் எனும் ஆல்கலாய்டு உள்ளது. இத்துடன் நேபல்லைன், நீயூலைன்,மெஸ்அகோனிடைன் ஆகியவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
இதயநோய் குணமடையும்
பசுமை இலைகளும், வேரும் மருத்துவகுணங்கள் கொண்டவை. பெரும்பாலும் வேரிலிருந்தே மருந்து தயாரிக்கப்படுகிறது. பசுமை இலைகள் மற்றும் மஞ்சரிகளில் இருந்து கசாயம் தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த வேர் இந்திய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இது உடல் வலுவேற்றி, காய்ச்சல் மற்றும் நரம்பு வலுவேற்றி. முடக்கு வாதம், இதய நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். ஓமியோபதியில் வலி போக்குவியாகவும், தூக்கமருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இது அதிக அளவில் உட்கொண்டால் நஞ்சாகிவிடும். பண்டைய காலத்தில் அம்புகளின் நுனியை நச்சுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.
முடக்குவாதத்தை குணமாக்கும்
விஷ்ணநாபியின் தரையடித்தண்டும், வேரும் கடும் விஷத்தன்மை வாய்ந்தவை. உரிய முறையில் பாடம் செய்யப்பட்டால் நச்சு குறைந்துவிடும். மிகச்சிறிய அளவில் 0.018 கிராம் உட்கொண்டால் தொண்டை கரகரப்பு, பக்கவாதம், தொடர்காய்ச்சல் ஆகியவற்றிர்கும் மருந்தாக பயன்படும். இதை விட கூடுதலாக உட்கொண்டால் போதை நச்சாகவும், தூக்க மருந்தாகவும் பயன்படும்.வேரின் கரைசலை 5 துளி எடுத்து பிற மருந்துகளுடன் சேர்த்து காய்ச்சல் மற்றும் முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது.
இதன் வேர் இதயநோயை குணப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை தூண்டுவியாகவும், அகோனிடம் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படுகிறது.
இதன் வேரில் பல நச்சு ஆல்கலாய்டுகள் உள்ளன. அகோனிடைன், இண்ட் அகோனிடைன்,சேசம் அகோனிடைன் ஆகிய டெரிபினாய்டு ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வேரின் பொடி சொறி, சிரங்கு மற்றும் மூட்டுவலியில் மேல்பூச்சாக பயன்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











