Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
தலைவலி போக்கும் கருநொச்சி தைலம்

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இதில் உள்ள வேதிப்பொருட்கள் ஆண்ட்ரோக்ராஃபோலைடு - பியுரனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செரிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால், போன்றவை காணப்படுகின்றன.
காயகல்ப மூலிகை
இலைகளும், வேரும் மருத்துவத் திறன் கொண்டவை. பூச்சிகளை அகற்றும், ஜுரம் நீக்கும், இலைகளின் உயிர்ச்சாறு, சீதபேதி, உடல்பலஹீனம், அஜீரணம், மந்தமாக செயல்படும் ஈரல், நரம்புவலி, செரிமாணம், ஆகியவற்றிர்க்கு உதவும். ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றோடு சாற்றினை கலந்து செய்யப்படும் மாத்திரைகள் குழந்தைகளின் அஜீரணத்தைப்போக்கும்.
கரு நொச்சி தைலம் ஜுரம் தடுக்கும். பூச்சிகளை அகற்றும். வாய் குழறுதலை தடுக்கும். சீதபேதியை தடுக்கும். மார்புச்சளிக்கு பயன்படும். நீரிழிவு நோய், அஜீரணம்,மேகவெட்டை நோய், ஜுரம் ஜலதோஷம், விட்டு விட்டு ஏற்படும் ஜூரம், சொறி, மஞ்சள் காமாலை, ஈரல் கோளாறுகள் மூலம் ஏற்படும் வீக்கம், போன்ற நோய்களுக்கு மருந்தாகும். ஸ்வித்ராதி லேபா என்னும் ஆயுர்வேத மருந்தின் முக்கிய கூறாக உள்ளது.
நொச்சி இலைக் காசயம்
நொச்சி இலையைக் கசக்கித் தலையை வைத்துக் கட்டினால் தலைபாரம், கழுத்து நரம்புக் கசிவு போகும். இலையை வதக்கி வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும். இதன் இலையை வதக்கித் துணியில் வைத்துத் தாங்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் தர கணுச்சூலை என்னும் கைவிரல், கால்விரல் கணுக்களின் வீக்கங்கள் குறையும். நன்கு குணம் ஆகும். நொச்சி இலைச்சாறு கால்லிட்டர், பொடுதலைச்சாறு கால்லிட்டர், நல்லஎண்ணெய் கால் லிட்டர் எடுத்து தைலம் காய்ச்சவும். இதை மூக்கில் நசியம் செய்ய கண்டமாலை என்னும் கொடிய நோய் குணமாகும்
வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்
வேரின் அடர்ந்த கசாயம் குடல் இளக்கி உணர்ச்சியூட்டும், உடல் அசதியைப் போக்கும். வேரின் உயிர்ச்சாறு கொண்ட அடர்ந்த கஷாயம் அன்றாடம் உபயோகிக்கப்படும். வயிற்றுப் பூச்சிக்கொல்லியாக உள்ளது. கசப்பான கசாயம் விட்டு விட்டு ஏற்படும் ஜுரத்தை குணப்படுத்தும்.
நொச்சித்தைலம்
நொச்சி இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணையை சேர்த்து காயவைத்து தைலம் தயாரிக்கலாம். இதனை காயங்களின் மேல் தடவ ரணம் குணமடையும். சளித்தொல்லைகள் குணமடையும். இந்த எண்ணையைத் தடவி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்து வந்தால் தலைவலி, தலை நோய்கள் யாவும் தீரும். எட்டு முறை குளித்தால் போதும். அதிகாலை குளிப்பது மிகவும் நல்லது. அன்றைய தினம் புளியை குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் பகலில் தூங்கக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











