For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கிட்டா விபரீதங்களை சந்திக்க நேரிடும்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நோய் பாதிப்பு இல்லாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் போது எண்ணற்ற விள

|

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நோய் பாதிப்பு இல்லாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் பெப்டிக் அல்சர். குடலில் புண் ஏற்பட்டாலே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது இதில் பெப்டிக் அல்சர் என்றால் சொல்லவா வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆஸ்பிரின் இரத்தம் உறைதலையும் தடுக்கிறது. பின்விளைவுகளை சந்தித்த பிறகாவது மருத்துவரை அணுகுங்கள்

Is it good to use aspirin pills without consulting the doctor?

அமெரிக்காவில் இருக்கும் இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில் இதய நோய்க்காக ஆஸ்பிரின் மாத்திரைகள் அதிகமாக உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. இளைஞர்களின் இந்தச் செயல் மிக ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என ஆராய்ச்சியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாம் மருத்துவரா ?

நாம் மருத்துவரா ?

6.6 மில்லியன் இளைஞர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் இதய பாதிப்புக்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் மருத்துவர்கள் ஆலோசனைகளை எல்லாம் யாரும் பெறுவதில்லை. காய்ச்சலுக்கு இந்த மாத்திரை, சளிக்கு இந்த மாத்திரை என நாமாகவே முடிவு செய்து கொண்டு சாப்பிடுகிறோம். நிச்சயம் சளியிலிருந்து அது கண்டிப்பாக விடுதலை அளிக்கும் ஆனால் பின்னால் வரக்கூடிய பின்விளைவுகளைக் குறித்து ஒரு போதும் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். நோயின் தன்மைகளை ஆராய்ந்து அந்த மருந்துகளைக் கொடுத்தாலும் பக்கவிளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துணை மருந்துகளையும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

Most Read:மேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை... இதுமட்டும் இருந்தா போதும்

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் இரத்தத் தட்டுகள் ஒட்டுவதைக் குறைத்து இரத்தம் உறைப்புத் தன்மையை குறைக்கிறது. அதே பிரச்சினையைத் தான் இரத்தப்போக்கின் போதும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டது போல் குறைந்த டோஸ் கொண்ட ஆஸ்பிரின் மருந்துகளை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுப்பதற்காக தினந்தோறும் பயன்படுத்துவது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

எந்த வயதினருக்கு ஆபத்து அதிகம்

எந்த வயதினருக்கு ஆபத்து அதிகம்

புதிய வழிகாட்டுதல்களின் படி 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் தினந்தோறும் குறைந்த டோஸ் ஆஸ்பிரின் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. (குறைந்த டோஸ் என்பது 75-100 மிகி) அதுமட்டுமில்லாமல் எந்த வயதினரும் ஆஸ்பிரின் மாத்திரைகளை பயன்படுத்தினால் இரத்தப்போக்கு உள்ளிட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்களின் புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே மாரடைப்பு, பக்கவாதம், இருதய அருவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பரிந்துரை பொருந்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கன் இருதய சங்கத்தின் வழிகாட்டுதலின் படி மருத்துவர்களின் ஆலோசனை வழங்கினால் மட்டுமே ஆஸ்பிரின் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

நோயே இல்லை ஆனா 23 % பேர் ஆஸ்பிரினை பயன்படுத்துறாங்க

நோயே இல்லை ஆனா 23 % பேர் ஆஸ்பிரினை பயன்படுத்துறாங்க

ஆஸ்பிரின் மருந்துகளைப் பயன்படுத்துவதுக் குறித்த ஆய்வில் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 23.4 % பேர் தங்களுக்கு இருதய சார்ந்த நோய்கள் இல்லாமல் இருதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்வதாக மருத்துவர் ஓ பிரையன் மற்றும் அவரது குழுவின் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதவீதம் மக்கள் தொகையில் 29 மில்லியனைத் தொடும். அதில் 6.6 மில்லியன் பேர் மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

இதே குழு 70 வயதிற்கும் மேற்பட்டவர்களை ஆய்வுக் குட்படுத்தியல் 50 % பேர் இருதய நோய்க்கான எந்த அடையாளமும் இல்லாத போதும் வந்துவிடாமல் தடுப்பதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகளை உண்கிறார்கள்.

பெப்டிக் அல்சர்

பெப்டிக் அல்சர்

அதுமட்டுமில்லாமல் மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் பயன்படுத்தும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் பெப்டிக் அல்சர் அதிகமாக ஏற்படுகிறது. இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆசைப்பட்டு கூடுதல் நோய்களை உள்வாங்கிக் கொள்ள விரும்புகிறோமோ என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பெப்டிக் அல்சரின் பாதிப்புகள்

பெப்டிக் அல்சரின் பாதிப்புகள்

வயிறு மற்றும் சிறுகுடலில் ஏற்படக்கூடிய திறந்த புண்கள் பெப்டிக் அல்சர் என அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் வலியோடு கூடிய இரத்தப் போக்கை அனுபவிக்கிறார்கள். மேலும் 10 சதவீத மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை ஆபத்தில் இருப்பவர்கள் வயதானவர்கள் வயிற்றுப் புண் உள்ளவர்களாகவோ அல்லது இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள்

இந்த நோயிக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும்

துளை: வயிற்றுப் பகுதியில் துளை ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமட்டுமில்லாமல் அடிவயிறில் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அளிக்கும்

உள்-இரத்தப்போக்கு

உள்-இரத்தப்போக்கு

இரத்தப்போக்கை உண்டாக்கும் அல்சர்கள் இரத்த இழப்பை ஏற்படுத்தும். இதனால் தலைசுற்றல், லேசான தலைவலி, கருப்பு மலம் ஆகிய பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும்.

Most Read:என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா? இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்

திசு

திசு

இந்த வகையான திண்மையான திசு அடிப்பட்ட பிறகு அந்த இடத்தில் வளரும். இந்த திசுக்கள் உங்கள் செரிமானப் பாதையில் உணவுகள் செல்வதை தடுத்து நிறுத்துகிறது. இதனால் வாந்தி மற்றும் உடல் எடை இழப்பு போன்றவையும் நடைபெறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is it good to use aspirin pills without consulting the doctor?

Without medical advice, aspirin drugs have become increasingly used to prevent heart disease. But there are countless consequences when it comes to using tablets without causing illness. Part of it is peptic ulcer. We cannot tolerate an ulcer in the gut. Aspirin also prevents blood clotting so Consult a doctor afterwards
Story first published: Friday, July 26, 2019, 10:44 [IST]
Desktop Bottom Promotion