Just In
- 1 hr ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 2 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உட்காந்துட்டு இருக்கும்போது காலாட்டுவீங்களா? செய்யுங்க தப்பில்லை.
சிலர் அமரும்போது காலாட்டிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி செய்யக் கூடாது நரம்புத் தளர்ச்சி வரும் என நிறைய பேர் சொல்லிக் காட்டிருப்பீர்கள். ஆனால் அது தவறில்லை என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது தெரியுமா?
காலாட்டிக் கொண்டிருப்பதால் ரத்தம் தடங்கலில்லாமல் செல்கிறது. தமனிகள் தொடர்பான நோய்கள் வருவதில்லை. குறிப்பாக இதய நோய்கள் வராது என கூறுகிறார்கள்.
ரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உடல் பாகங்களுக்கும், மற்ற பாகங்களிலிருந்து இதயத்திற்கு அனுப்புவதிலும் தமனி பெரும் பங்கு வகிக்கின்றது. அதேபோல், ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதிலும், கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் முக்கிய பொறுப்பு தமனிக்கு உள்ளது. இந்த தமனிகளில் பாதிப்பு ஏற்பட்டால், இதய நோய்கள் ஏற்படுகின்றன.
வெகு நேரம் அமர்ந்து கொண்டேயிருப்பது ரத்த ஓட்டத்தை குறைக்கும். கால்களை ஆட்டிகொண்டே இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தமனிகள் ந்னறாக ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு காலை மட்டும் ஆட்டாமல் மாறி மாறி இரண்டு கால்களையும் ஆட்டுவதால் பயனளிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.(எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா).
ஆனால் இது நடைப்பயிற்சிக்கோ, ஜாகிங்கோ ஒப்பாகாது. ஒரே இடத்தில் அமர நேர்கையில் அவ்வப்போது நடப்பது, நிற்பதும்தான் இதய நோய் பாதிப்புகளிலிருந்து விடுவிக்கும் என்று கொலம்பியாவின் மிசௌரி பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜௌம் படில்லா கூறுகிறார்.
இந்த ஆய்வில் ஆரோக்கியமான இளைஞர்கள் 11 பேரை ஈடுபடுத்தினர். அவர்களை 3 மணி நேரம் தொடர்ச்சியாக அமர வைத்தனர். பாதி பேருக்கு கால்களை ஆட்டச் சொல்லியும் , பாதங்களை மெதுவாக தட்ட சொல்லியும் கேட்டனர். மீதியிருக்கும் பாதி பேரை சும்மாவே அமரச் செய்தனர்.
பின்னர் இவ்விரு குழுவையும் ஆராய்ந்ததில் காலையாட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகவும், தமனிகள் சீராகவும் இருந்தன. காலை ஆட்டாமல் அமர்ந்த குழுவிற்கு ரத்த ஓட்டம் மிகக் குறைவாகவும், நாளங்கள் சுருங்கியும் காணப்பட்டது.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆரோக்கியமனதல்ல. அவ்வப்போது நடக்க வேண்டும். நடக்கும் வாய்ப்பில்லையென்றால் மாற்றுவழியாக காலாட்டிக் கொண்டிருப்பது நல்லது என படில்லா கூறினார்.