Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
உட்காந்துட்டு இருக்கும்போது காலாட்டுவீங்களா? செய்யுங்க தப்பில்லை.
சிலர் அமரும்போது காலாட்டிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி செய்யக் கூடாது நரம்புத் தளர்ச்சி வரும் என நிறைய பேர் சொல்லிக் காட்டிருப்பீர்கள். ஆனால் அது தவறில்லை என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது தெரியுமா?
காலாட்டிக் கொண்டிருப்பதால் ரத்தம் தடங்கலில்லாமல் செல்கிறது. தமனிகள் தொடர்பான நோய்கள் வருவதில்லை. குறிப்பாக இதய நோய்கள் வராது என கூறுகிறார்கள்.

ரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உடல் பாகங்களுக்கும், மற்ற பாகங்களிலிருந்து இதயத்திற்கு அனுப்புவதிலும் தமனி பெரும் பங்கு வகிக்கின்றது. அதேபோல், ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதிலும், கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் முக்கிய பொறுப்பு தமனிக்கு உள்ளது. இந்த தமனிகளில் பாதிப்பு ஏற்பட்டால், இதய நோய்கள் ஏற்படுகின்றன.
வெகு நேரம் அமர்ந்து கொண்டேயிருப்பது ரத்த ஓட்டத்தை குறைக்கும். கால்களை ஆட்டிகொண்டே இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தமனிகள் ந்னறாக ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு காலை மட்டும் ஆட்டாமல் மாறி மாறி இரண்டு கால்களையும் ஆட்டுவதால் பயனளிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.(எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா).
ஆனால் இது நடைப்பயிற்சிக்கோ, ஜாகிங்கோ ஒப்பாகாது. ஒரே இடத்தில் அமர நேர்கையில் அவ்வப்போது நடப்பது, நிற்பதும்தான் இதய நோய் பாதிப்புகளிலிருந்து விடுவிக்கும் என்று கொலம்பியாவின் மிசௌரி பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜௌம் படில்லா கூறுகிறார்.
இந்த ஆய்வில் ஆரோக்கியமான இளைஞர்கள் 11 பேரை ஈடுபடுத்தினர். அவர்களை 3 மணி நேரம் தொடர்ச்சியாக அமர வைத்தனர். பாதி பேருக்கு கால்களை ஆட்டச் சொல்லியும் , பாதங்களை மெதுவாக தட்ட சொல்லியும் கேட்டனர். மீதியிருக்கும் பாதி பேரை சும்மாவே அமரச் செய்தனர்.
பின்னர் இவ்விரு குழுவையும் ஆராய்ந்ததில் காலையாட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகவும், தமனிகள் சீராகவும் இருந்தன. காலை ஆட்டாமல் அமர்ந்த குழுவிற்கு ரத்த ஓட்டம் மிகக் குறைவாகவும், நாளங்கள் சுருங்கியும் காணப்பட்டது.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆரோக்கியமனதல்ல. அவ்வப்போது நடக்க வேண்டும். நடக்கும் வாய்ப்பில்லையென்றால் மாற்றுவழியாக காலாட்டிக் கொண்டிருப்பது நல்லது என படில்லா கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


