Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
இதயத்தை பலப்படுத்த செய்யுங்கள் கரௌஞ்சாசனா !!
இதயம்தான் இன்றியமையாதது என சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. நாம் யார் என அதன் துடிப்பே நம்மை உணர வைக்கிறது.
சுத்தமான ரத்தத்தை மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும் மிக முக்கிய வேலையை செய்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் மோசமான உணவுகள் மற்றும் புகை , மது போன்ற வேண்டாத தீய பழக்கங்களாலும் இதயம் பாதிக்கின்றன. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு 40 களிலேயே வருகின்றன.

இப்போது குழந்தைகளையும் இதய நோய்கள் தாக்கும் அபாயத்தில் இருக்கிறோம். காரணம் கடைகளில் வாங்கும் கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள்,. சரியான உடற்பயிற்சி இல்லாதது என சிறு வயதிலேயே உடல் பருமன் வந்து இதனால் பல ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.
நோய்கள் என்பவை வராதவரை எதுவும் தெரியாது. வந்தால்தான் அதன் பாதிப்பை உணர்கிறோம். வருமுன் காப்போம் என்று யாரும் உணர்வதில்லை. இதனால்தான் இன்று எல்லாரும் மருத்துவமனைகளின் முன் நிற்கிறோம்.
எளிமையான சத்தான உணவு, போதிய உடல் உழைப்பு, குழந்தைகள் ஓடியாடி விளையாடுதல் என எந்த ஒரு ஆரோக்கியமான சூழ் நிலையிலையிலும் சமுதாயம் நன்றாக இருக்கும். அங்கே நல்ல எண்ணங்கள் மட்டுமே வளரும்.
இதயத்தை பலப்படுத்துவது மிக முக்கியம் காய்கறிகள் பழங்கள் பின்னர் யோகா இவை எல்லாம் இதயத்திற்கு நல்ல நண்பர்கள். யோவாவிலுள்ள க்ரௌன்சாசனா இதயத்தை பலப்படுத்துகிறது. அங்கே தங்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
க்ரௌஞ்சா என்றால் சமஸ்கிருதத்தில் நாரை. நாரை போன்ற வடிவத்தில் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றது. எப்படி செய்யலாம் என காண்போம்.
கிரௌஞ்சாசனா :
முதலில் கால் நீட்டி அமருங்கள். பின்னர் வலது காலை மடக்கி அமர வேண்டும்.
அதன்பின் மெதுவாக இடது காலை மேலே நீட்டுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டி உடலிற்கு அருகில் கொண்டு வாருங்கள். இரு கைகளாலும் இடது பாதத்தை பிடித்துக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இடது காலை மேல் நோக்கி நீட்டுவதில் சிரமமிருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். இதே நிலையில் ஆழ்ந்து இழுத்து மூச்சை விட்டபடி 15 நொடிகள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம்.
பலன்கள் :
இதயத்திற்கு வலு தரும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். முட்டியிலுள்ள தசைகளை பலப்படுத்தும். கால்களுக்கு நல்ல பலத்தை தரும். தோள்பட்டைக்கு நெகிழ்வுத்தன்மையை தரும்.
குறிப்பு : பாதம் மற்றும் மூட்டுகளில் அடிபட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














