Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஆண், பெண் மத்தியில் வேறுபடும் மாரடைப்பு அறிகுறிகள்!
ஆண், பெண் உடற்கூறு ஹார்மோன் மாற்றங்களினால், இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றின் அறிகுறிகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சிகாகோவின் ரஷ் மருத்துவ மையத்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தும் என தெரியுமா?
பொதுவாக, அதிகப்படியான நெஞ்சு வலி மற்றும் கழுத்து, தோள்பட்டை வலி போன்றவை தான் ஆரம்பக் கால இதய நோய் அறிகுறிகளாக தோன்றும். பெண்களின்
சில சுழற்சி முறை ஹார்மோன்களின் காரணங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றால், இதய நோய் அறிகுறிகள் குறித்து பெண்கள் தெளிவற்று போகின்றனர் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
முப்பது வயதுக்கு மேல் பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!
இதனால் இதய நோய் இருக்கிறதா என தெரியும் முன்னரே சிலர் உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் அச்சம் தெரிவிகின்றனர்...

நான்கில் ஒருவர்
நான்கில் ஒரு அமெரிக்கர் இதய நோய் பாதிப்புகள் மூலம் மரணமடைகின்றனர். ஒவ்வொரு வருடமும் 6,10,000 பேர் இதன் காரணமாய் உயிரிழக்கின்றனர் என அமெரிக்க நோய் பாதுகாப்பு மற்றும் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு
இதய நோய் பாதிப்பு ஏற்படும் மூன்றில் இரண்டு பெண்களுக்கு மேம்பட்ட அறிகுறிகள் தென்படாமலே இருதய அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிடுகிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதய வலி
இந்த மூன்றில் இரண்டு பெண்களுக்கு இறக்கும் போது அதிகப்படியான நெஞ்சு வலியும், நெஞ்சை கசக்குவது போல அழுத்தமோ ஏற்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
உடற்கூறு ரீதியாக ஆண், பெண் ஹார்மோன்களில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இரத்த நாளங்கள் ஹார்மோன்களுக்கு ஏற்ப தான் பதிலளிக்கும். பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பம் போன்ற சுழற்சி ஹார்மோன்களும் இருக்கின்றன.

இரத்த அழுத்தம்
பெண்களின் இந்த சுழற்சி முறை ஹார்மோன்களால் அவர்களுக்கு அதிகமாக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பொதுவாகவே அவர்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள்.

வலிகள்
இந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக அவர்களுக்கு தாடை, தோள்பட்டை, கழுத்து போன்ற இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன என அனபெல்லா எனும் மருத்துவ பேராசிரியர் கூறியிருக்கிறார்.

தெளிவற்ற அறிகுறிகள்
மாதவிடாய் காலத்திலும் இதுப் போன்ற வலிகள் ஏற்படுவதால், இவை மாரடைப்பிற்கான அறிகுறிகள் என பெண்களுக்கு தெளிவற்று போககிறது. இதனாலேயே, பெண்கள் தொடக்க காலத்திலேயே இதய நலன் சீர்கேடு பற்றி அறியாமல் போகின்றனர். இதனால் தான் பெண்கள் மத்தியில் இதய நோய் சார்ந்த மரணம் அதிகரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications