Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
உலக உணவு கொள்கை அறிக்கையின் படி வெறும் இத்தனை சதவீத மக்கள்தான் ஆரோக்கிய உணவை உண்கிறார்களாம்...ஷாக் ஆகாதீங்க!
தற்போதைய நவீன உலகில் உணவுமுறை என்பது வேகமாக மாறிவருகிறது. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை விட இந்தியர்கள் அதிக சிற்றுண்டிகளையம், ஆரோக்கியமற்ற உணவுகளையும் அதிகம் சாப்பிடுகிறார்கள்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) மே 29 அன்று வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 38 சதவிகித இந்தியர்கள் ஆரோக்கியமான உணவுகளுக்குப் பதிலாக நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்கின்றனர்.

அவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே ஆரோக்கியமான உணவுகளை உண்கின்றனர், 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை இன்றைய இந்தியர்களின் உணவுப் பழக்கம் குறித்த கவலையை எழுப்புகிறது. உணவுப் பழக்கமே ஒருவரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஏறக்குறைய பாதி மக்கள் தேவையான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினால், நோய்களின் வீதமும் அதிகரிக்கத் தொடங்கும். இது பல வழிகளில் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கை, 2024
சமீபகாலமாக, அதிகமான மக்கள், பேக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் புதியதாக இல்லாத இறைச்சி மற்றும் நீண்ட நேரம் சமைப்பதற்கு பதிலாக உடனடியாக சமைக்கக்கூடிய உணவுகளை உண்ணத் தொடங்கியுள்ளனர். அதாவது, அதே மக்கள் போதுமான புதிய காய்கறிகள், பச்சை உணவுகள், பருப்பு வகைகள், புரதம், நார்ச்சத்து, பழங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த பிற உணவுகளை சாப்பிடுவதில்லை.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது இறுதியில் தேசிய அளவிலான நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மோசமான உணவுப் பழக்கம் காரணமாக, நாட்டின் 16.6 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குளோபல் ஃபுட் ரிப்போர்ட் கூறுகிறது.
இந்த அறிக்கையின்படி, ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் மட்டுமே ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள். அதாவது காய்கறிகள், மாவுச்சத்துள்ள பிரதான உணவுகளான அரிசி, பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ்கள் அல்லது விதைகள் மற்றும் விலங்கு உணவுகள் உட்பட ஐந்து பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை உண்கிறார்கள்.
இந்த உணவுப்பழக்கம் ஆரோக்யத்திற்கு ஏன் ஆபத்தானது?
உங்கள் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நுகர்வு மற்றும் நோய்களைத் தடுக்க, பரிந்துரைக்கப்பட்ட ஐந்து உணவுக் குழுக்களின் விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். பரிந்துரைக்கப்ட்ட ஆரோக்கிய உணவு என்பது குறைந்தது ஒரு விலங்கு சார்ந்த உணவு, ஒரு காய் அல்லது விதை, ஒரு காய்கறி, ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவு மற்றும் ஒரு பழமாகும்.
ஒரு நபரை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விலக்கி வைக்க தினசரி தேவைப்படும் குறைந்தபட்ச ஊட்டச்சத்து இதுவாகும். இருப்பினும், மக்கள் இந்த விதிகளை புறக்கணிக்கத் தொடங்கினால், ஆரோக்கியமான உணவுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடத் தொடங்கினால், உங்கள் ஆரோக்கியம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும். இந்த 5 ஆரோக்கிய உணவுகள் ஏன் முக்கியமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
- இந்த உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதால் இதய நோய்கள், தைராய்டு பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
- இந்த உணவுகளில் ஆரோக்கியமற்ற எண்ணெய், கலோரிகள், டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிமுள்ளன, இது உங்கள் உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் நோய், சிறுநீரக பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
- பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் செயற்கை சர்க்கரை, பாதுகாப்பு பொருட்கள், செயற்கை நிறம் மற்றும் செயற்கை சுவைகள் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நச்சுத்தன்மையுடையதாக மாறும். மேலும், அதிக சர்க்கரை உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும்.
இந்தியர்களின் உணவுப் பழக்கம், ஆரோக்கியமான உணவுகளுக்கு தேவைப்படும் செலவுகள் காரணமாக, பல ஆண்டுகளாக மாறிவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் விலை உயர்ந்தவை என்று அது கூறுகிறது, அதேசமயம் வறுத்த, பொறிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் மிகவும் மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கின்றன. அதனால்தான் மக்கள் ஆரோக்கியமற்ற உணவை நோக்கி நகர்கின்றனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












