Just In
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 1 hr ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 2 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காளான் சாப்பிட உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? இந்த விஷயங்களை அப்புறமா தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க...!
காளான்கள் பூஞ்சை ஒவ்வாமை கொண்ட சில நபர்களுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவை பூஞ்சைக் குழுவைச் சேர்ந்தவை.
காளான்கள் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சுவையான உணவுகள்தான். அவை கலோரிகளில் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகவும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பல உணவுகளில் காளான்கள் அதன் சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பல நச்சு காளான் வகைகளும் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன.
காளான்கள் அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக நுகரப்படுகின்றன. உண்ணக்கூடிய காளான்கள் பூஞ்சை ஒவ்வாமை கொண்ட சில நபர்களுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அவை பூஞ்சைக் குழுவைச் சேர்ந்தவை. எனவே ஒவ்வாமை இருந்தால் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காளானால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சோர்வு
சிலருக்கு காளான் சாப்பிட்ட பிறகு சோர்வு ஏற்படலாம். அவர்கள் அசௌகரியம் மற்றும் பலவீனத்தை உணரலாம். இந்த பக்க விளைவு பெரும்பாலானவர்களுக்கு ஏற்படலாம். இவ்வாறு உணர்பவர்கள் அடிக்கடி காளான் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
வயிறு கோளாறுகள்
சில காளான்களின் பக்க விளைவுகளும் பலரிடையே வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. சிலருக்கு, காளான்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனால் ஒருவர் வாந்தி, தசைப்பிடிப்பு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம்.
சரும அலர்ஜிகள்
காளான்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதாக அறியப்படுகின்றன. சிலருக்கு காளான்கள் தோல் வெடிப்பு மற்றும் தோல் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. சிலர் மூக்கில் இரத்தப்போக்கு, உலர்ந்த மூக்கு மற்றும் வறண்ட தொண்டை மற்றும் அதிக அளவு எடுத்துக் கொள்ளும்போது பிற பிரச்சினைகளையும் அனுபவிக்கின்றனர்.
MOST READ: இந்த நேரத்தில் க்ரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துமாம்...பார்த்து குடிங்க...!
கூச்ச உணர்வு
காளான்களை 20 முதல் 30 நிமிடங்கள் உட்கொண்ட பிறகு, சிலர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள். பின்னர், உற்சாகமாக இருப்பது போன்ற உணர்வோடு, அவர்கள் முழு உடலிலும் ஒரு கூச்ச உணர்வை அனுபவிக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து மக்கள் மனச்சோர்வையும் அனுபவிக்கிறார்கள். வெகுசிலரே இந்த பக்கவிளைவுக்கு ஆளாகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது
சில மருத்துவர்கள் தாய்ப்பால் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் காளான்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றனர். கடுமையான பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
தலைவலி
தலைவலியை ஏற்படுத்தும் சில மருந்துகள் மற்றும் பொருட்கள் உள்ளன, ஆனால் இது சிறிது நேரத்தில் குணமாகும். ஆனால் சிலர் காளான்களை உட்கொண்ட பிறகு, ஒரு நாளுக்கு மேல் இதுபோன்ற தலைவலியை அனுபவித்ததாக கூறியுள்ளனர்.
MOST READ: உங்க ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையை நாசமாக்கும் உங்களிடம் இருக்கும் குணம் என்ன தெரியுமா?
பதட்டம்
காளான்கள் சில நபர்களிடமும் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன, இது லேசானது முதல் தீவிர நிலை வரை இருக்கும். காளான்களை அதிக அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது இந்த பக்க விளைவுகள் மோசமடைகின்றன.
மன நோய்
சில நபர்களுக்கு காளான்களால் ஏற்படும் மிக மோசமான பக்க விளைவு மன நோய். அபரிமிதமான பயம், பீதி தாக்குதல்கள் போன்ற மனநல கோளாறுகள் காளான்களை எடுத்துக் கொண்ட பிறகு அனுபவித்ததாக ஆய்வில் கூறியுள்ளனர்.
MOST READ: உங்க ராசி மிகவும் ஆபத்தான ராசிகளின் பட்டியலில் நீங்க எத்தனையாவது இடத்துல இருக்கு தெரியுமா?
தலைச்சுற்றல்
சிலர் சில மணிநேர நுகர்வுக்குப் பிறகு கடுமையான தலைச்சுற்றல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காளான்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் சாப்பிடும்போது மயக்கம் கூட ஏற்படலாம்.