Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உருளைக் கிழங்கை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் இந்த நோய்கள் குணமாகும்!!
உருளைக் கிழங்கு மிகவும் நன்மை தரக் கூடிய கிழங்கு வகை. இதனை வேக வைத்து சாப்பிடுவதைப் போல், பச்சையாக சாறு எடுத்து குடிப்பதாலும் பல நோய்கள் தீருகின்றன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
எல்லாருக்கும் உருளைக் கிழங்கு பிடிக்காமல் இருக்காதா? பெரும்பாலோனோர் அதனை வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை விரும்புவார்கள்.
ஆனால் அதனை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பலவித நோய்கள் குணமாகின்றன. வராமலும் தடுக்கப்படுகின்றன.
அதனை எப்படி தயார் செய்வது மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமென்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஆர்த்ரைடிஸ் வலி :
ஆர்த்ரைடிஸான்ல் உண்டாகும் மூட்டு இணைப்புகளில் வலி மற்றும் கழுத்து, தோள்பட்டைகளில் உண்டாகும் வலிகளை குறைக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் மூட்டு மற்றும் எலும்பு வலிகளால் பாதிக்கப்படுவார்கள். அந்த சமயங்களில் மிகவும் நல்லது.

அமில கார சம நிலை :
உடலில் அதிக அமிலத்தன்மை இருந்தால் நுண் கிருமிகள் விரைவில் உருவாகும்.அதற்கேற்ப சூழ் நிலை இருப்பதால் பல மடங்கு பரவி நோய்களை உண்டாக்கும். உருளைக் கிழங்கு சாறு குடிப்பதால் அமிலத்தன்மை குறைந்து அமில காரச் சம நிலை சமமாகும். இதனால் உண்டாகும் தொற்றுக்கல் மற்றும் நோய்களை தடுக்க முடியும்.

சரும தேமல் :
சருமத்தில் தொற்றினால் அல்லது அலர்ஜியினால் உண்டாகும் தேமல், படை மற்றும் அலர்ஜி இருக்குமிடத்தில் உருளைக் கிழங்கு சாறை தினமும் தடவி வாருங்கள். விரைவில் அவை சருமத்தை குணப்படுத்தும். தொற்றை போக்கும்.

வாத ரோகம் (Gout)
யூரிக் அமிலம் சில பிரச்சனைகளால் உப்பாக மூட்டுகளின் இணைப்பில் தங்கி வலியை உண்டாக்கும். குறிப்பாக கால் கட்டை விரலில் உண்டாகும் இந்த (Gout) பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இந்த உருளைக் கிழங்கு சாறு. இது யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. சிறு நீரகத்தையும் சுத்தப்படுத்தும். காலை, மாலை என இரு வேளை இந்த சாறை அருந்துங்கள்.

நச்சுக்கள் வெளியேற :
உடலில் தங்கப்படும் நச்சுக்கள் மோசமான எதிர்மறை விளைவே நமக்கு தரும். அவற்றை எளிய முறையில் அகற்ற வேண்டுமென்றால் நீங்கள் உருளைக் கிழங்கு சாறை தினமும் குடித்துப் பாருங்கள்.

தயாரிக்கும் முறை :
ஒரு நடுத்தர உருளைக் கிழங்கை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் இதனை வடிகட்டி பருகவும். உங்களுக்கு உடலில் போட்டாசியம் அதிக அளவு அல்லது குறைவான அளவு இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications