Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
எது விரைவில் புற்று நோயை தரும்? புகையா? பூச்சிக் கொல்லி மருந்தா?
புற்று நோய் என்றாலே மருத்துவர் முதற்கொண்டு எல்லாருக்கும் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் புற்று நோய்க்கு சொல்வார்கள்.
இதை சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதனால் புற்று நோய் வரும் என பலப்பல காரணங்கள். எல்லாமே மறுக்க முடியாத உண்மை.
புகை பிடித்தல், மது, செயற்கை இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயன உரங்கள், கதிர்வீச்சு என இன்று பார்க்கும் யாவைகளிலும் இந்த கொடிய நோய் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எது அதிகமாக புற்று நோய் ஏற்பட காரணம்? புகை, செயற்கை இனிப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புகைப் பிடித்தல்?
ஒரு சிலர் சொல்வார்கள் புகை மது புற்று நோய்க்கு காரணமென்று. மறுக்க முடியாததுதான். சிகரெட்டில் இருக்கும் பல நச்சுக்கள் புற்று நோயை வரவழைக்கும். அதனை பிடிப்பவர்களைப் போல் அந்த புகையை சுவாசிப்பவர்களும் கடுமையான விளைவுகளை தருகிறது.

செயற்கை இனிப்பு
செயற்கை இனிப்புகள் நரம்புத் தளர்ச்சி, பதட்டம், மனச் சோர்வு மற்றும் பல உபாதைகளைத் தரும் சிறு நீரகம், கல்லீரல் ஆகியவற்றை பழுத்டையச் செய்யும் அபாயத்தை தரும்.
பாக்கெட்டுகளில் வரும் பெரும்பாலான இனிப்புப் பொருட்கள் செயற்கை இனிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுபவை. அவையும் புற்று நோய் உண்டாக்கும் காரணிகள். ஆகவே அவற்றை தூர எறிந்துவிடுங்கள்.

மரம்பணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி :
பயிர்களுக்கு செலுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தில் மரபணு மாற்றபட்ட உயிரினத்தை கலப்பார்கள். இவை பயிர்களின் தன்மையை மாற்றும்.

மரம்பணு மாற்றபட்ட உரங்கள்:
மரபணு மாற்றப்பட்ட உரங்களை உபயோகித்து காய்கறிகளின் இயல்பை மாற்றி விரும்பும் வகையில் காய்களை விளைவிப்பது மிகவும் ஆபத்தான முறைதான்.
அதேபோல் பூச்சிகளை அண்ட விடாமல் செலுத்தும் இந்த மரபணு மாற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் கழுவினாலும் போகாது. அப்படியே காய், பழங்களில் ஒட்டிக் கொள்ளும்

புற்று நோய் தாக்கம் :
அந்த காய்களை நாம் சாப்பிடும்போது நம் உடலிலும் மரபணு மாற்றம் துரிதமாக இருக்கும். இதனால் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை தருகிறது.
புகை, செய்ற்கை இனிப்புகளை விட, மரபணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் காய்கறிகள் புற்று நோய் உண்டாக்கும் அபாயத்தை தருகிறது.



Click it and Unblock the Notifications