Just In
- 8 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 33 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எது விரைவில் புற்று நோயை தரும்? புகையா? பூச்சிக் கொல்லி மருந்தா?
புற்று நோய் என்றாலே மருத்துவர் முதற்கொண்டு எல்லாருக்கும் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் புற்று நோய்க்கு சொல்வார்கள்.
இதை சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதனால் புற்று நோய் வரும் என பலப்பல காரணங்கள். எல்லாமே மறுக்க முடியாத உண்மை.
புகை பிடித்தல், மது, செயற்கை இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயன உரங்கள், கதிர்வீச்சு என இன்று பார்க்கும் யாவைகளிலும் இந்த கொடிய நோய் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எது அதிகமாக புற்று நோய் ஏற்பட காரணம்? புகை, செயற்கை இனிப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
புகைப் பிடித்தல்?
ஒரு சிலர் சொல்வார்கள் புகை மது புற்று நோய்க்கு காரணமென்று. மறுக்க முடியாததுதான். சிகரெட்டில் இருக்கும் பல நச்சுக்கள் புற்று நோயை வரவழைக்கும். அதனை பிடிப்பவர்களைப் போல் அந்த புகையை சுவாசிப்பவர்களும் கடுமையான விளைவுகளை தருகிறது.
செயற்கை இனிப்பு
செயற்கை இனிப்புகள் நரம்புத் தளர்ச்சி, பதட்டம், மனச் சோர்வு மற்றும் பல உபாதைகளைத் தரும் சிறு நீரகம், கல்லீரல் ஆகியவற்றை பழுத்டையச் செய்யும் அபாயத்தை தரும்.
பாக்கெட்டுகளில் வரும் பெரும்பாலான இனிப்புப் பொருட்கள் செயற்கை இனிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுபவை. அவையும் புற்று நோய் உண்டாக்கும் காரணிகள். ஆகவே அவற்றை தூர எறிந்துவிடுங்கள்.
மரம்பணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி :
பயிர்களுக்கு செலுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தில் மரபணு மாற்றபட்ட உயிரினத்தை கலப்பார்கள். இவை பயிர்களின் தன்மையை மாற்றும்.
மரம்பணு மாற்றபட்ட உரங்கள்:
மரபணு மாற்றப்பட்ட உரங்களை உபயோகித்து காய்கறிகளின் இயல்பை மாற்றி விரும்பும் வகையில் காய்களை விளைவிப்பது மிகவும் ஆபத்தான முறைதான்.
அதேபோல் பூச்சிகளை அண்ட விடாமல் செலுத்தும் இந்த மரபணு மாற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் கழுவினாலும் போகாது. அப்படியே காய், பழங்களில் ஒட்டிக் கொள்ளும்
புற்று நோய் தாக்கம் :
அந்த காய்களை நாம் சாப்பிடும்போது நம் உடலிலும் மரபணு மாற்றம் துரிதமாக இருக்கும். இதனால் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை தருகிறது.
புகை, செய்ற்கை இனிப்புகளை விட, மரபணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் காய்கறிகள் புற்று நோய் உண்டாக்கும் அபாயத்தை தருகிறது.