Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும் முக்கிய 5 காரணங்கள் !!
நெஞ்சு கரிப்பது போன்று உணர்வு, நாவில் கசப்புத் தன்மை, மற்றும் தொண்டை வரை எரிச்சல் இருந்தால் அதனை நெஞ்செரிச்சல் என்று சொல்வார்கள். இது நோயோ, பிரச்சனையோ அல்ல. ஏதாவது பாதிப்பின் அறிகுறி.
நெஞ்செரிச்சல் எப்பவாவது ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இருந்தால் அதற்கு சிகிச்சை அவசியம். தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதிகளில் ஜீரணிக்க உதவும் நொதிகள், அங்கு உண்டாகும் அழுத்தத்தால் உணவுகுழாயின் மேலே வரை செல்லும். இதனால் அமிலத்தன்மை தொண்டை வரை பரவி எரிய ஆரம்பிக்கும். இதுதான் நெஞ்செரிச்சல்.

நெஞ்செரிச்சல் வருவதற்கு உண்ணும் உணவுகள், மன அழுத்தம், உறுப்புகள் பாதிப்பு என பல காரணங்கள் இருக்கிறது. இது ஒரு நோயல்ல. அறிகுறி.

உங்களுடைய காலை காபி :
பொதுவாக தூங்கி எழுந்ததும் என்சைம்கள் சுரக்க ஆரம்பிக்கும். காரணம் அப்போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் தூண்டப்படுவதால் ஜீரண மண்டலம் வேலை செய்ய தொடங்கும்.
அந்த சமயத்தில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது அதிக என்சை சுரப்பதால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகவே நீர் குடித்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பின் காபி குடிக்கவேண்டும்.

இரவுகளில் இதை குடிப்பதால் :
இரவில் மது அதிகமாக குடிக்கும்போது அது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும். எச்சில் , குடலில் படிந்திருக்கும் அதிகப்படியான அமிலத்தை அப்புறப்படுத்தும்.
மது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும்போது அமிலம் அதிகமாகி நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

புதினா கம் மெல்லுவீர்களா?
புதினாவினால் செய்த பொருட்களுமே உங்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தாது. மாறாக அதிகப்படுத்தும்.
புதினா சூயிங்கம் பற்களுக்கு பாதுகாப்பானதென்றாலும் அது வயிற்றிலுள்ள தசைகளை தளரச் செய்வதால் அதிக என்சைம்களை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்

தாமத இரவு உணவு :
இரவுகளில் தாமதமாக உண்டால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். தூங்கப்போவதற்கு 2 மணி நேரம் முன்பாக இரவு உணவை கட்டாயம் முடித்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் உணவுகள் :
இரவு என்ன உணவுகள் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். உருளைக் கிழங்கு, போன்ர வாயு தரக் கூடிய உணவு, மசாலா உணவுகள் அதிக காற்றை உடலில் உற்பத்தி செய்கின்றன.
இவை என்சைம் சுரப்பை அதிகப்படுத்தும். விளைவு நெஞ்செரிச்சல் அதிகமாகும். பொதுவாகவே மசாலா, வாய்வு தரக் கூடிய உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications











