Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
உங்கள் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும் முக்கிய 5 காரணங்கள் !!
நெஞ்சு கரிப்பது போன்று உணர்வு, நாவில் கசப்புத் தன்மை, மற்றும் தொண்டை வரை எரிச்சல் இருந்தால் அதனை நெஞ்செரிச்சல் என்று சொல்வார்கள். இது நோயோ, பிரச்சனையோ அல்ல. ஏதாவது பாதிப்பின் அறிகுறி.
நெஞ்செரிச்சல் எப்பவாவது ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் எப்போதும் இருந்தால் அதற்கு சிகிச்சை அவசியம். தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதிகளில் ஜீரணிக்க உதவும் நொதிகள், அங்கு உண்டாகும் அழுத்தத்தால் உணவுகுழாயின் மேலே வரை செல்லும். இதனால் அமிலத்தன்மை தொண்டை வரை பரவி எரிய ஆரம்பிக்கும். இதுதான் நெஞ்செரிச்சல்.

நெஞ்செரிச்சல் வருவதற்கு உண்ணும் உணவுகள், மன அழுத்தம், உறுப்புகள் பாதிப்பு என பல காரணங்கள் இருக்கிறது. இது ஒரு நோயல்ல. அறிகுறி.

உங்களுடைய காலை காபி :
பொதுவாக தூங்கி எழுந்ததும் என்சைம்கள் சுரக்க ஆரம்பிக்கும். காரணம் அப்போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் தூண்டப்படுவதால் ஜீரண மண்டலம் வேலை செய்ய தொடங்கும்.
அந்த சமயத்தில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது அதிக என்சை சுரப்பதால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகவே நீர் குடித்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பின் காபி குடிக்கவேண்டும்.

இரவுகளில் இதை குடிப்பதால் :
இரவில் மது அதிகமாக குடிக்கும்போது அது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும். எச்சில் , குடலில் படிந்திருக்கும் அதிகப்படியான அமிலத்தை அப்புறப்படுத்தும்.
மது எச்சில் சுரப்பை கட்டுப்படுத்தும்போது அமிலம் அதிகமாகி நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

புதினா கம் மெல்லுவீர்களா?
புதினாவினால் செய்த பொருட்களுமே உங்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தாது. மாறாக அதிகப்படுத்தும்.
புதினா சூயிங்கம் பற்களுக்கு பாதுகாப்பானதென்றாலும் அது வயிற்றிலுள்ள தசைகளை தளரச் செய்வதால் அதிக என்சைம்களை சுரக்கச் செய்து நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்

தாமத இரவு உணவு :
இரவுகளில் தாமதமாக உண்டால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். தூங்கப்போவதற்கு 2 மணி நேரம் முன்பாக இரவு உணவை கட்டாயம் முடித்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் உணவுகள் :
இரவு என்ன உணவுகள் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். உருளைக் கிழங்கு, போன்ர வாயு தரக் கூடிய உணவு, மசாலா உணவுகள் அதிக காற்றை உடலில் உற்பத்தி செய்கின்றன.
இவை என்சைம் சுரப்பை அதிகப்படுத்தும். விளைவு நெஞ்செரிச்சல் அதிகமாகும். பொதுவாகவே மசாலா, வாய்வு தரக் கூடிய உணவுகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications











