Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
உங்க இரத்தம் எவ்வாளவு அசுத்தமா இருக்குன்னு தெரியுமா? அத சுத்தம் செய்ய வேண்டாமா?
உடலில் சருமத்தில் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும்படி அழுக்கு சேருகிறது. ஆனால், நமது உணவு பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றால் நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளிலும் கூட நிறைய அழுக்கு சேருகிறது. அவற்றை நாம் கண்களால் பார்க்க முடியாது, ஏதேனும் உடல்நலக் குறைபாடு அல்லது அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும்.
நமது உடலிலேயே மிகவும் முக்கியமானது இரத்தம். இது சீர்கெட்டு போனால், உடல் பாகம் அனைத்தும் சீர்கெட ஆரம்பத்துவிடும். எனவே, அப்படிப்பட்ட இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்க, சுத்திகரிப்பு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்...

செம்பருத்தி இதழ்கள்
செம்பருத்திப்பூவின் இதழ்களை காய வைத்து பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

ஆப்பிள், கேரட் சாறு
1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

திராட்சை
திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.

நன்னாரி வேர்
நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.

ஓரிதழ் தாமரை
ஓரிதழ் தாமரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

விளாம்பழம்
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.

இஞ்சி, எலுமிச்சை சாறு
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவற்றைக் கலந்து அருந்தி வர இரத்தம் தூய்மை அடையும்.



Click it and Unblock the Notifications











