உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!

நாம் உணவில் சேர்க்கும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஒருசில தனித்தன்மை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு உடல் பாகத்தை வலுவூட்டும் விதத்தில் தான் அமைகிறது. அதற்காக தான் அனைத்து உணவுப் பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில் உணவில் சொம்பை சேர்த்துக் கொள்வதால் செரிமானம், வாயுத்தொல்லை, உடல் சுறுசுறுப்பு என பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

தினமும் உணவில் சோம்பு சேர்ப்பதால் ஜீரண பாதை சுறுசுறுப்பு ஆகிறது. இதனால் அஜீரண கோளாறுகள் குறையும்.

வாயுத்தொல்லை

வாயுத்தொல்லை

செரிமானத்தை சரி செய்யும் தன்மை உடைய சோம்பு, அஜீரணத்தின் காரணமாக ஏற்படும் அஜீரண வாயுத்தொல்லைக்கு தீர்வளிக்கிறது.

இரப்பை

இரப்பை

உணவில் சோம்பு சேர்ப்பதினால் இரப்பையின் குறைபாடுகளுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

மூளை

மூளை

மேலும் உணவில் சோம்பு சேர்த்து சமைப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பும், ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. கண்ணுக்கு நல்ல பலன் தருகிறது.

மாதவிடாய்

மாதவிடாய்

உணவில் அதிக அளவில் உபயோகித்தால் மாதவிடாயை தூண்டிவிடும்.

நீரிழிவு

நீரிழிவு

மேலும் உணவில் சோம்பு சேர்ப்பதால் இது நீரழிவு நோய்க்கு துணை மருந்தாக பயன்படுகிறது. இதனால் நீரிழிவை கட்டுபடுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 16, 2016, 15:18 [IST]
Desktop Bottom Promotion