Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுவதை தடுக்கும் காளானைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் காய்ச்சல், ஜல தோஷம் என உள்ளதா? அப்படியெனில் இந்த கட்டுரை பதிவு உங்களுக்குதான்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது.
காளன் பற்றி உங்களுக்கு தெரியாதென்றால், அதனைப் பற்றி சில விஷயங்கள் இங்கே. இந்தியாவில் ஏராளமான காளான் வகைகள் உள்ளன. இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன.
அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன. இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன. அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான்.
இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது. மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.
எய்ட்ஸ்க்கும் மருந்தாக -பயன்படுகிறது. குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்கள் இந்த காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள்.
ஜப்பான் மற்றும் சைனாவில் சுமார் 21- 40 வயது வரை உள்ளவர்களை தினமும் காளான் உண்ண சொல்லியிருக்கிறார்கள் .
தொடர்ந்து நான்கு வாரம் அவர்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் செல்களை ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் டி- செல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் சைவமாக இருக்கக் கூடாது. தேநீர் அருந்தக் கூடாது. ஏனெனில், காய்கறிகளிலும், தேநீரிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், அவைகளுடன் காளான் சக்தியை ஒப்பீடு செய்வது கடினம்.
அதேபோல் காளானால் கொழுப்பை கரைத்து நோய் எதிர்ப்பு சக்தியை எந்த அளவு தரமுடியும் என சோதிக்க முடியாது என்று இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆகவே காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். புற்று நோயை தடுக்கும். இளமையை பாதுகாக்கும். இத்தகைய அற்புதங்களைக் கொண்ட காளானை ஓரங்கட்டாமல் உங்கள் சமைலில் சேர்த்திடுங்கள். அரோக்கியமான வாழ்க்கை கிடைக்கட்டும்.