Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஹோட்டல் சாப்பாடு Vs வீட்டு சாப்பாடு
இன்றைய காலங்களில் பெரும்பாலோனோர், வெளியூரிலிருந்து, வந்து நகரங்களில் தங்கி வேலை பார்ப்பவர்களே. தங்குமிடத்தில் எங்கே சமைப்பது? நேரம் எங்கே இருக்கிறது? என சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.
ஆனால் அவ்வாறு அசட்டையாக விடுவது பின்னாளில் உங்களுக்கு நோயினைத் தரும் என்பதை அறிவீர்களா? அதுவும் நாள்பட்ட வியாதியான சர்க்கரை வியாதி வரும் என மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுக்கின்றது.

சர்க்கரை வியாதி என்பது மெது மெதுவாய் ஆளைக் கொல்லும் வியாதி என்றால் மிகையகாது. உடல் பருமனால், சர்க்கரை வியாதி வரும். சர்க்கரை வியாதி வந்தால், அடுத்தடுத்த பல்வேறு வியாதிகளுக்கு அடிபோடும். இது உயிருக்கு உலை வைக்கும்.
ஹோட்டல் , விடுதி போன்ற இடங்களில் உண்ணுவது உங்களுக்கு சக்தியை தருமே தவிர சத்துக்கள் மிகவும் குறைவு. இதனால் உடல் பருமனாகி, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகிறது.
ஆனால் வீட்டுச் சாப்பாடு சுத்தமாகவும் போதிய சத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். வயிற்றுக்கு பாதகம் தராது எனவும் கூறுகின்றனர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த ஆய்வாளர்கள்.
ஹோட்டலில் சாப்பிடுபவர்களை விட, வீட்டுச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு 15 சதவீதம் சர்க்கரை வியாதி வருவது குறைவு என கூறுகின்றனர்.
முதல் சில வாரங்களில் இரவு உணவு மட்டும் வீட்டில் சாப்பிடுபவர்களையும், இரவு உணவு வெளியில் எடுத்துக் கொள்பவர்களையும் ஆய்வு செய்ததில் , ஹோட்டலில் சாப்பிடுபவர்களை விட வீட்டில் சாப்பிடுபவர்களுக்கு 15 % சர்க்கரை வியாதி வரும் ஆபத்து குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே போல மதிய உணவுகளையும் வீட்டு உணவை உண்பவர்களுக்கு இன்னும் 10 சதவீதம் குறைவாகவே நோயின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் செய்யப்படும் உணவை சாப்பிட்டு, முறையான வாழ்க்கை முறை இருந்தால், சர்க்கரை வியாதி வருவது தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் PLOS Medicine என இதழில் வெளிவந்துள்ளது. உண்ணும் முறையைக் பொறுத்தே ஒருவருக்கு சர்க்கரை வியாதி வருவதும், வராமல் தடுப்பதும் சொல்ல முடியும். ஆக உணவுப்பழக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிட்டு , உடலுக்கு உழைப்பைக் கொடுத்து வாழ்ந்தால், நோயை எட்ட வைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

