Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
Father's Day : உங்க அப்பா இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தா அவங்கள பத்திரமா பாத்துக்க என்ன செய்யணும் தெரியுமா?
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குறிப்பாக 50 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள் இதய நோயால் பாதிக்கப்படுபவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். கரோனரி தமனி நோய் மாரடைப்புக்கு வழிவகுக்கும், இந்த நோயால் கரோனரி தமனிகளில் அடைப்புகள் உருவாகின்றன.
உங்கள் பெற்றோருக்கு இதய நோய் இருந்தால் அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவர்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் இதய நோய் ஏற்படலாம். இதய சிகிச்சையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றங்கள் காரணமாக, இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக் கொள்வது சவாலானது, அதிலும் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கூடுதல் பொறுப்பு உங்களுக்கு அதிகரிக்கிறது. இந்த பதிவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
பேசுவது நல்லது
உங்கள் தந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டால், ஆரம்பத்திலேயே உங்கள் பெற்றோருடன் அவர்களின் மருத்துவ சிகிச்சையின் நிதி அம்சங்கள்-மருத்துவக் காப்பீடு, அவர்களின் சொந்தச் சேமிப்பு அல்லது உங்கள் நிதி உதவி பற்றி அரட்டையடிப்பது சிறந்ததுபேசுவது சிறந்தது.
அவர்களின் சிகிச்சையின் போது நிதி பிரச்சனை இல்லை என்பதை நீங்கள் அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிதிச் சுமையாக இருப்பார்கள் என்று கருதுவதால், இதயம் தொடர்பான ஆபத்தான பிரச்சினைகளை மறைத்து விடுகிறார்கள்.
பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்
உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் இருந்தால், நிதி, நேரம் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் பொறுப்புகளை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தீர்மானித்து விவாதிப்பது உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
நோயைப் பற்றி தெரிந்து கொள்ளவும்
உங்கள் மருத்துவரிடம் அல்லது இணையத்தில் உள்ள நம்பகமான வலைத்தளங்களில் இருந்து உங்கள் தந்தை பாதிக்கப்பட்டிருக்கும் நோய் என்ன, அதன் செயல்முறை, அதன் அறிகுறிகள், விளைவுகள், முன்கணிப்பு மற்றும் சிகிச்சை விருப்பங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம்.
சிறந்த மருத்துவ நடைமுறைகள் மற்றும் நோயாளியின் விருப்பங்களின் அடிப்படையில் மருத்துவரும் நோயாளியும் சேர்ந்து மிகவும் பொருத்தமான சிகிச்சை விருப்பத்தை விவாதித்து முடிவு செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் நேரத்தை அவர்களுக்குக் கொடுங்கள்
மருத்துவரிடம் செல்லும்போதெல்லாம் அவர்களுடன் செல்லுங்கள். இது அவர்களுக்கு உங்களின் இருப்பை உறுதியளிப்பதாக இருக்கும். சில சமயங்களில் அவர்கள் உங்களுக்குச் சுமையாகவோ அல்லது அழுத்தமாகவோ இருப்பதாக நினைத்து மருத்துவர் சொன்ன அனைத்தையும் உங்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். சரியான நேரத்தில் அவர்கள் மருத்துவர்களிடம் சோதனைக்கு செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தியாகம் செய்ய தயங்கக் கூடாது
இதய நோயால் பாதிக்கப்பட்ட தந்தை குறிப்பிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களைச் பின்பற்றும்படி கூறப்படலாம். அவர்களுக்கு ஆதரவளிக்கவும், முடிந்தால் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பது உங்கள் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
மருந்துகளை சரிபார்க்கவும்
இதயநோயின் ஆபத்து அதிகரிக்காமல் இருக்க மருந்துகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என்பதால், அறிவுறுத்தப்பட்டபடி அவர்கள் தங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவும். வேண்டுமென்றே அல்லது நினைவாற்றல் குறைபாடு காரணமாக பெற்றோர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வதை மறக்க வாய்ப்புள்ளது என்பதால், அவர்களின் மாத்திரையின் எண்ணிக்கையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
அறிகுறிகளை கவனிக்க வேண்டியது அவசியம்
மார்பு வலி, மூச்சுத் திணறல், சோர்வு, கால் வீக்கம் போன்ற மோசமான இதய நிலையின் அறிகுறிகளைக் கவனியுங்கள். அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவமனையில் சேர்ப்பது உடனடி சிகிச்சைக்கும், மரணத்தைத் தடுப்பதற்கும் வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
