தலைசுற்ற வைக்கும் பேரரசி கிளியோபாட்ரா பற்றிய உண்மைகள்... எத்தனை ஆண்களைதான் இவங்க கல்யாணம் பண்ணாங்க?

உலக வரலாற்றில் ராணி என்றால் அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது கிளியோபாட்ராதான். எகிப்தை ஆண்ட இந்த ராணியின் பெயர் காலம் கடந்தும் உலகம் முழுவதும் பரவியிருக்க காரணம் அவருடைய அழகு மட்டுமல்ல, அவருடைய சாதனைகளும், புத்திக்கூர்மையும்தான்.

அவர் அழகிய இளவரசி என்பதையும் தாண்டி பயமுறுத்தும் தலைவர் மற்றும் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. கிமு 51-30 க்கு இடைப்பட்ட அவரது ஆட்சியின் போது, ​​உள்நாட்டுப் போரினால் திவாலாகி பிளவுபட்டிருந்த அவருடைய நாட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டுவந்தார். இந்த பதிவில் கிளியோபாட்ரா பற்றி வரலாறு இதுவரை உங்களுக்குக் கூறாத சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Unknown Facts About Cleopatra in Tamil

தாலமிக் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் கிளியோபாட்ராதான்

கிளியோபாட்ரா எகிப்தில் பிறந்திருந்தாலும், அவர் எகிப்தியர் அல்ல. அவரது தோற்றம் தாலமிக் வம்சத்தில், மாசிடோனிய கிரேக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தது. அவர் அலெக்சாண்டரின் தளபதியும் நண்பருமான டோலமி I 'சோட்டர்' என்பவரின் வழித்தோன்றல் ஆவார். கிமு 305 முதல் 30 வரை எகிப்தை ஆண்ட கடைசி வம்சம் தாலமிகள். கிமு 51 இல் அவரது தந்தை டோலமி XII இறந்த பிறகு, கிளியோபாட்ரா தனது சகோதரர் டோலமி XIII உடன் எகிப்தின் இணை-ரீஜண்ட் ஆனார்.

அதிக கல்வியும், புத்திக்கூர்மையும் நிறைந்தவர்

இடைக்கால அரபு நூல்கள் கிளியோபாட்ரா ஒரு கணிதவியலாளர், வேதியியலாளர் மற்றும் தத்துவஞானியாக அவர் செய்த சாதனைகளைப் பாராட்டுகின்றன. அவர் அறிவியல் புத்தகங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது, மேலும் வரலாற்றாசிரியர் அல்-மசூதியின் குறிப்புகளின் படி, அவர் பன்மொழிப் புலவராகவும் இருந்தார், அவரது தாய்மொழியான கிரேக்கம், எகிப்தியன், அரபு மற்றும் ஹீப்ரு உட்பட 5 மற்றும் 9 மொழிகளில் அவர் பேசுவதாக வரலாறு தெரிவிக்கின்றன.

கிளியோபாட்ரா தனது இரண்டு சகோதரர்களை மணந்தார்

கிளியோபாட்ரா தனது சகோதரரும் இணை ஆட்சியாளருமான டோலமி XIII ஐ மணந்தார், அவருக்கு அப்போது 10 வயது கிளியோபட்ராக்கு 18 வயது. கிமு 48 இல், டோலமி தனது சகோதரியை பதவி நீக்கம் செய்ய முயன்றார், சிரியா மற்றும் எகிப்துக்கு தப்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினார்.

டோலமி XIII தனது ரோமானிய-எகிப்திய படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இறந்தவுடன், கிளியோபாட்ரா அவரது இளைய சகோதரர் டோலமி XIV ஐ மணந்தார். அப்போது அவருக்கு வயது 22; அவரது சகோதரருக்கு வயது 12. அவர்களது திருமணத்தின் போது, ​​கிளியோபாட்ரா சீசருடன் தனிப்பட்ட முறையில் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கிமு 32 இல் மார்க் ஆண்டனியை மணந்தார். ஆக்டேவியனால் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஆண்டனியின் சரணடைதல் மற்றும் தற்கொலையைத் தொடர்ந்து, கிளியோபாட்ரா அவரது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார். அதன்பின் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது.

கிளியோபாட்ராவின் அழகு பிரச்சாரப்படுத்தப்பட்டது

பண்டைய வரலாற்றாசிரியர்களிடையே கிளியோபாட்ரா ஒரு சிறந்த அழகி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்கால காட்சி ஆதாரங்கள் கிளியோபாட்ரா ஒரு பெரிய கூரான மூக்கு, குறுகிய உதடுகள் மற்றும் கூர்மையான, கன்னம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு ஆபத்தான மற்றும் கவர்ச்சியான பெண்ணாக அவரது புகழ் உண்மையில் அவருடைய எதிரியான ஆக்டேவியனால் உருவாக்கப்பட்டது. ரோமானிய வரலாற்றாசிரியர்கள் அவரை ஒரு விபச்சாரியாக சித்தரித்தனர், அவர் சக்தி வாய்ந்த ஆண்களை மயக்கி அதிகாரத்தை ப் பெறுவதற்காக தனது அழகை பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

அவர் தனது புகழை அரசியலுக்காக பயன்படுத்தினார்

கிளியோபாட்ரா தன்னை ஒரு உயிருள்ள தெய்வம் என்று நம்பினார், மேலும் உருவத்திற்கும் சக்திக்கும் இடையிலான உறவை நன்கு அறிந்திருந்தார். அவர் தனது உருவத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தினார்

கிளியோபாட்ரா தன்னை ஒரு உயிருள்ள தெய்வம் என்று நம்பினார், மேலும் உருவத்திற்கும் சக்திக்கும் இடையிலான உறவை நன்கு அறிந்திருந்தார். சம்பிரதாய நிகழ்வுகளில் ஐசிஸ் தெய்வமாக உடையணிந்து, ஆடம்பரத்துடன் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொள்வார் என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.

புகழ்பெற்ற பாரோ

சமகால எகிப்திய ஆதாரங்கள் தனது மக்களால் நேசிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. அவருடைய முன்னோர்கள் கிரேக்க மொழி பேசினார்கள் மற்றும் கிரேக்க பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தார், அவர்களைப் போலல்லாமல் கிளியோபாட்ரா ஒரு உண்மையான எகிப்திய பாரோவாக அடையாளம் காணப்பட்டார். அவர் எகிப்திய மொழியைக் கற்றுக்கொண்டார் மற்றும் பாரம்பரிய எகிப்திய பாணியில் தன்னுடைய ஓவியங்களை உருவாக்கினார்.

வெற்றிகரமான தலைவராக இருந்தார்

கிளியோபாட்ராவின் ஆட்சியின் கீழ், எகிப்து மத்தியதரைக் கடலில் பணக்கார நாடு மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் ரோமானியப் பேரரசில் இருந்து சுதந்திரமாக கடைசியாக இருந்தது. கிளியோபாட்ரா எகிப்திய பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார், மேலும் அரபு நாடுகளுடன் வர்த்தகத்தை பயன்படுத்தி உலக வல்லரசாக தனது நாட்டின் நிலையை உயர்த்தினார்.

காதலர்களை அரசியல் கூட்டாளியாகவும் பயன்படுத்தினார்

ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனியுடன் கிளியோபாட்ராவின் உறவுகள் காதல் தொடர்புகளைப் போலவே இராணுவத் தொடர்புகளாகவும் இருந்தன. சீசரை சந்தித்த நேரத்தில், கிளியோபாட்ரா நாடுகடத்தப்பட்டார் மற்றும் அவரது சகோதரரால் வெளியேற்றப்பட்டார். சீசர் சண்டையிடும் உடன்பிறப்புகளுக்கு இடையே ஒரு சமாதான ஏற்படுத்துபவராக இருந்தார்.

கிளியோபாட்ரா தன்னை ஒரு கம்பளத்தில் போர்த்தி ரோமானிய தளபதியிடம் வழங்குமாறு தன் வேலைக்காரரை வற்புறுத்தினார். அரியணையை மீண்டும் பெறுவதற்கு சீசரிடம் அவர் உதவிக்காக கெஞ்சினார். ஆனால் அனைவரையும் விட அவர் மார்க் ஆன்டனியுடன் தீவிரமான காதலில் இருந்தார்.

சீசர் கொல்லப்பட்டபட்ட போது அவர் ரோமில் இருந்தார்

கிமு 44 இல் சீசர் சதி செய்யப்பட்ட கொல்லப்பட்ட போது கிளியோபாட்ரா ரோமில் அவரது காதலியாக வாழ்ந்து வந்தார். சீசரின் படுகொலை அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது, மேலும் அவர் தனது இளம் மகனுடன் டைபர் ஆற்றின் குறுக்கே தப்பி ஓடினார். எகிப்துக்குத் திரும்பிய கிளியோபாட்ரா உடனடியாக தனது ஆட்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அவர் தனது சகோதரரான டோலமி XIV ஐ அகோனைட் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, அவருக்குப் பதிலாக அவரது மகன் டோலமி XV 'சீசரியன்' என்பவரை நியமித்தார்.

நான்கு குழந்தைகள் இருந்தனர்

கிளியோபாட்ராவுக்கும், ஜூலியஸ் சீசருக்கும் ஒரு மகன் இருந்தார், அவருக்கு சீசரியன் என்று பெயரிடப்பட்டது, அதன் அர்த்தம் 'சிறிய சீசர்'. அவரது தற்கொலைக்குப் பிறகு, ரோமானிய பேரரசர் அகஸ்டஸின் உத்தரவின் கீழ் சீசரியன் கொல்லப்பட்டார். கிளியோபாட்ராவுக்கு மார்க் ஆண்டனியுடன் மூன்று குழந்தைகள் இருந்தனர்: டோலமி 'பிலடெல்பஸ்' மற்றும் இரட்டையர்கள் கிளியோபாட்ரா 'செலீன்' மற்றும் அலெக்சாண்டர் 'ஹீலியோஸ்'. அவருடைய சந்ததியினர் யாரும் எகிப்து வாரிசாக வாழவில்லை.

Story first published: Thursday, June 13, 2024, 15:27 [IST]
Desktop Bottom Promotion