Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
உங்க குடும்பத்துல சர்க்கரை நோயாளி இருக்காங்களா? உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது-ன்னா இத செய்யுங்க..
Family History of Diabetes In Tamil: உலகெங்கிலும் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தினந்தோறும் அதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் இந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
சர்க்கரை நோய் ஒருவருக்கு வருவதற்கு முக்கிய காரணமே வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இவ்விரண்டுமே தற்போது மாறியுள்ளன. இதன் விளைவாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

எனவே இத்தகையவர்கள் இந்த சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஒருசில விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், இதன் அபாயத்தைக் குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவும் டைப்-2 சர்க்கரை நோயானது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையாகும். இது இதய நோய், பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த டைப்-2 சர்க்கரை நோயை ஒருவரால் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியுமென்றால், மற்ற நிலைமைகளின் அபாயத்தையும் குறைக்கலாம். சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள், தங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் பின்வரும் 5 விஷயங்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கீழே அவை பட்டியலிடப்பட்டுள்ளன.
புரோட்டீனை எடுக்கவும்
சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவு புரோட்டீனை எடுக்க வேண்டும். அதுவும் தினமும் ஒருவர் குறைந்தது 1 கிலோவுக்கு 1 கிராம் புரோட்டீனை எடுக்க வேண்டும். இந்த புரோட்டீன் தசைகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, பராமரிக்கவும் உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோய் வரக்கூடாதெனில், புரோட்டீன் உணவுகளை தினமும் தவறாமல் எடுத்து வாருங்கள்.
கார்போஹைட்ரேட்டுகளை அளவாக எடுக்கவும்
கார்போஹைட்ரேட்டுகள் நமக்கு எதிரி அல்ல. ஆனால் அந்த கார்போஹைட்ரேட்டுக்களை அளவுக்கு அதிகமாக எடுத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அளவாக கார்போஹைட்ரேட்டுக்களை எடுங்கள். அதுவும் அந்த கார்போஹைட்ரேட்டுகளை புரோட்டீன் உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களுடன் சேர்த்து எடுங்கள். இதனால் கார்போஹைட்ரேட்டுக்களை அதிகம் எடுக்க நேரிடாது. மேலும் இப்படி உட்கொள்ளும் போது, அது இரத்தத்தில் க்ளுக்கோஸை மெதுவாக வெளியிடச் செய்து, இரத்த சர்க்கரை சீராக பராமரிக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்
அவசரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவதால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. நாள்பட்ட மன அழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுத்து, சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளான தியானம் செய்வது, யோகாவின் ஈடுபடுவது, மூச்சு பயிற்சியை மேற்கொள்வது போன்ற, உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்கவும்
தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, சர்க்கரை நோயைத் தடுப்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளான விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாக்கிங் அல்லது வலிமை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உணவுகளுக்கு இடையே சீரான இடைவெளியை பராமரிக்கவும்
முக்கியமாக சர்க்கரை நோய் வரக்கூடாதெனில் ஒவ்வொரு உணவுக்கும் இடையே 4-5 மணிநேர இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். மேலும் இரவு உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த க்ளுக்கோஸ் ஒழுங்காக பராமரிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இப்படி இடைவெளியை பராமரிக்கும் போது நமது உடல்கள் குளுக்கோஸை திறம்பட செயலாக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் சர்க்கரை நோய் விரைவில் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். முக்கியமாக சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள் இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











