Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
அஜீரணத்தை குணப்படுத்தும் வீராசனா- தினம் ஒரு யோகா
அஜீரணம் என்பது உண்ணப்படும் உணவு முழுவதும் செரிக்காமல் வயிற்றிலேயே இருக்கும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும். அஜீரணத்தால், வாந்தி, வயிற்றுப் போக்கும் கூட ஏற்படும்.
காரணம் :
பொதுவாக குளிர்காலங்களில் ஜீரண சக்தி குறைந்து காணப்படும். காரணம் உடல் வெப்பம் குறைந்து காணப்படும். இதனால் என்சைம்களின் சுரப்பும் குறைந்திருக்கும். எனவேதான் ஜீரணத் தன்மையும் குறைவாக இருக்கும்.
அந்த சமயங்களில் அதிக கொழுப்பு, எண்ணெய் வகைகளை சாப்பிட்டால் அஜீரணம் எற்படும். அது தவிர்த்து, அல்சர், இரைப்பை கற்கள், இரைப்பையில் பிரச்சனைகள் ஆகியவற்றாலும் அஜீரணம் உண்டாகும்.
அஜீரணம் ஏற்படாமல் இருக்கவும், பசியை தூண்டவும் யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வீராசனா. கதா நாயகன் தோற்றம் என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. எப்படி இந்த ஆசனத்தை செய்வது என்று பார்க்கலாம்.

வீராசானம் :
முதலில் ஒரு விரிப்பில் முட்டிபோட்டு அமருங்கள். இரண்டு கால்களும் ஒட்டியபடி முட்டி போட்டு இருக்க வேண்டும். பாதத்தின் மீது அமருங்கள்.
மேல் பாதம் முழுவதும் தரையோடு ஒட்டியிருக்க வேண்டும். உள்பாதத்தின் மீது நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும். உடலை நேராக வைத்திருங்கள்.
முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு உள்ளிழுத்தபடி மூச்சை ஆழ்ந்து இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருங்கள்.
இந்த ஆசனத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் செய்யலாம். இதனை செய்யும்போது, வயிறு காலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
பலன்கள் :
ஜீரணத்தை அதிகப்படுத்தும், ஆஸ்த்மா, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மூட்டு பாதிப்பு இருப்பவர்கள், இதய பாதிப்பு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

