Just In
- 36 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களின் பிரச்சனைகளைப் போக்கும் பத்த கோணாசனம் -தினம் ஒரு யோகா
யோகாவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இந்த யோகா எளிதாக இருக்கும். அமர்வது போன்று செய்யப்படும் இந்த யோகா அடிவயிற்றில் உள்ள ஹார்மோன்களை தூண்டி, அங்கு உள்ள உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகம் பாயச் செய்கிறது.
இந்த காலகட்டத்தில் 5 லிருந்து 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் உருவாகிறது. இந்த யோகா செய்வதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும்.
பெரும்பாலும் இப்போதுள்ள பெண்கள் உடலுக்கு அதிக வேலைகள் கொடுப்பது கிடையாது. உட்கார்ந்தபடியே வேலை செய்வதனாலும், சரியான உடற்பயிற்சி இல்லாததாலும், அடிவயிற்றில் ரத்த ஓட்டம் குறைவாகவே காணப்படும். இது கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பொதுவாக ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது, அந்த உறுப்புகள் உள்ள பகுதிகளில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் நோய்கள் தடுக்கப்படும்.
இந்த பத்த கோணாசணம் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க காரனமாகின்றன. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நீர்ப்பைகள் கருப்பையில் உருவாவதை தடுக்கச் செய்யும்.
பத்த கோணாசனம் செய்யும் முறை :
முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள். இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.. அந்த நிலையில் 1- 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்
பலன்கள் :
மன
அழுத்தம்,
தேவையில்லாத
குழப்பங்கள்,
கருப்பை
நீர்கர்ட்டி
ஆகியவைகள்
வராமல்
தடுக்கும்.
அது
போலவே
முறையற்ற
மாதவிலக்கு
சீராகும்.
முடிஉதிர்தல்,
முகப்பரு,
உடல்
பருமன்
ஆகியவைகளும்
சீராகும்.
தினமும்
இரு
வேளைகள்
செய்யுங்கள்.