Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உடல் பருமனா? கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க!
இந்த இன்ஸ்டென்ட் காலத்துல எல்லாமே ஈஸியாய் கிடைக்குது. சாலையில் நடந்து செல்லும்போது விதவிதமான கலர்கலரான உணவுவகைகள் மற்றும் அதன் வாசனைகள் நம்மை ஈர்க்கும். நாக்கு ஊறச் செய்து சாப்பிடத் தூண்டும். உடனே சென்று ஒரு பிடிபிடித்துவிட்டுதான் வருவோம்.பின் அதற்கு அடிமையாகி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிட்டு உடல் எடையை அதிகப்படுத்தி விடுவோம்.
இதுதான் குழந்தைகளிருந்து பெரியவர்கள் வரை நடக்கிறது. உடல் எடை அதிகமானால் டயாபடிஸ், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

பிறகு எப்போதுதான் வாழ்க்கையை அனுபவிப்பது என்கிறீர்களா? அளவுக்கு மீறினால் எதுவும் உடலுக்கு கேடு என்பதை சாப்பிடும்போதெல்லாம் நினைவில், வைத்துக் கொள்ளுங்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய எனர்ஜி தருகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது .கூடவே ரத்தக்கொதிப்பு,சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.
வாழ்க்கை அனுபவிக்க என்று சொல்லி, கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு , அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த எளிய ட்ரிங்க் குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும் .
தேவையானவை :
வாழைப்பழம் -1
ஆரஞ்சு -1
பட்டைபொடி-அரைஸ்பூன்
சோயா மில்க்-அரைக் கப்
வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக் கொதிப்பை அண்ட விடாது. ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.
ஆரஞ்சில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வாழைப்பழம் ஆரஞ்சு, ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து பருகவும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது. மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்.
தித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













