Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
5 மாதங்களில் சர்க்கரை நோயில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
இங்கு ஐந்தே மாதங்களில் சர்க்கரை நோயில் இருந்து முழுமையாக விடுவிக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை சோதனையின் மூலம் அறிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட தினமும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் எவ்வித பலனும் தெரியவில்லை.

ஆகவே, அவர் இயற்கை வழியில் அதனை சரிசெய்ய முடிவெடுத்தார். இதற்காக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொண்டு வந்தார். ஆரம்பத்தில், இந்த பழக்கத்தால் எந்நேரமும் கடுமையான தாகத்தை உணர்ந்த அவர், மருத்துவரை சந்தித்து தனக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என சோதித்துக் கொண்டார்.
சோதனையில் அவரது சர்க்கரையின் அளவு 29 ஆகவும், நீண்ட நாட்களாக அவரது கணையம் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இனி இவர் உயிர் வாழ வேண்டுமானால், தினமும் இன்சுலின் எடுக்க வேண்டியதாயிருந்தது. வேறு வழி இல்லாமல், இவரும் மருத்துவர் பரிந்துரைத்த தெரபியை பின்பற்ற ஆரம்பித்தார்.

சில காலம் கழித்து...
இன்சுலினை தொடர்ச்சியாக எடுத்து வந்ததில், அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். சில காலம் கழித்து, அவரது நிலைமை மோசமானது மற்றும் வேறு பல உடல் நல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

டாக்டர் ஜான் ஜிர்டம்
ஒரு நாள் இவர் 12 வருடங்களாக பச்சை உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்த டாக்டர் ஜான் ஜிர்டம்மின் டிவி இன்டர்வியூ நிகழ்ச்சியைப் பார்த்தார். நிகழ்ச்சி முடித்ததும், டாக்டர் ஜானைப் போலவே பச்சை உணவுகளை உட்கொள்ள முடிவெடுத்தார். தனது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டார்.

முதல் வாரம்
முதல் வாரத்தில் இவருக்கு குறிப்பிட்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தது. இருப்பினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இதனால் இவரது இரத்த சர்க்கரை அளவில் 5 குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த முன்னேற்றத்தால் ஒரு கட்டத்தில் இன்சுலின் எடுப்பதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டார். ஒருவேளை தேவைப்பட்டால் இன்சுலினை எடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது இரத்த சர்க்கரை அளவு நிலையாகவே இருந்தது மற்றும் உடல் எடையும் குறைய ஆரம்பித்தது.

நல்ல முன்னேற்றம்
புதிய உணவுப் பழக்கத்தால் 25 நாட்களில் 11 கிலோ உடல் எடை குறைந்திருந்தது மற்றும் இதை அப்படியே தொடர்ந்தார். 4 மாதங்கள் கழித்து, 20 கிலோ எடை குறைந்திருந்தது மற்றும் இவர் இன்சுலின் எதுவும் எடுப்பதில்லை. இவரது இரத்த அழுத்த அளவு 120/70 ஆகவும், ட்ரைகிளிசரைடு அளவு 1.4 ஆகவும் இருந்தது.
இவரது இந்த புதிய உணவுப் பழக்கத்தில் இவர் அதிகம் குடித்த ஒரு ஜூஸ் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூஸைக் குடித்து வந்தால், நிச்சயம் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 5
ஆப்பிள் - 2
கிவி - 2
கேல் - 1 கையளவு

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, பிளெண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
இந்த ஜூஸை காலையில் பாதியைக் குடித்துவிட்டு, பின் எஞ்சியதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள்.

மேலும் சில டிப்ஸ்...
நீங்களும் இந்த டயட்டை பின்பற்ற நினைத்தால், இந்த ஜூஸ் உடன் நாள் முழுவதும் நற்பதமான பழங்கள் மற்றும் ஃபுரூட் சாலட், டூனா மீன் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications