Latest Updates
-
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சுவர்ணா அரிசி!

மேலும் இந்த ஆய்வு நீரிழிவு ஏற்படுவதற்கு காரணமான கிளைசீமிக் இண்டெக்சை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகமாக அரிசி உணவை உண்பவருக்கு அதிகமாக நீரிழிவு ஏற்படுகின்றது. ஏனெனில் அரிசியில் கிளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருக்கிறது. ஆகவே அவர்கள் அரிசியில் ஆய்வு செய்தனர். அதற்காக உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளையும் அரிசிகளின் மீது ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் மொத்தம் 235 அரிசிகளின் மீது ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்திய அரிசி வகையான சுவர்ணா, ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு உள்ளிட்ட அரிசி வகைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் இந்திய அரிசி வகையான சுவர்ணாவில் குறைவான கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கிறது என்றும், மற்ற ஆஸ்திரேலிய அரிசி வகையான டூங்கரா மற்றும் பாஸ்மதி, பிலிப்பைன்ஸ் அரிசி வகையான மெலிசா பிட்ஜ்ஜெரால்டு ஆகியவற்றில் சுவர்ணாவை விட அதிகமாகவும் கிளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த ஆய்வில், அதிகமான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், எளிதாக விரைவில் செரித்து, அதனை உடலானது ஒரேநேரத்தில் முற்றிலும உறிஞ்சி, இறுதியில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது. இதனாலேயே அரிசியை உண்பதால் நீரிழிவு ஏற்படுகின்றது என்றும், ஆனால் குறைவான அளவு கிளைசீமிக் இண்டெக்ஸ் இருக்கும் அரிசியை உண்பதால், செரிமானத்தின் அளவு குறைவாக இருப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது மெதுவாக, தேவையான அளவு உடலில் ஏறும், ஆகவே அதனால் நீரிழிவு ஏற்படுவது கட்டுப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் உலகளவில் சாப்பிடுவதற்கு சத்தான அரிசியாக இந்திய அரிசியான சுவர்ணாவையே அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், அரிசி உணவை உண்ணாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. தினமும் அரிசி உணவானது உடலுக்கு கொஞ்சமாவது வேண்டும். ஆகவே அவர்கள் இந்த சுவர்ணா அரிசியை வாங்கி உண்டால், சர்க்கரை நோயானது கட்டுப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications