Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
இந்த 5 கொடிய நோய்களை வாசனையைக் கொண்டே கண்டறியலாம்.. உங்க மேல வித்தியாசமான வாசனை வீசுதா? உஷாரா இருங்க..
இயற்கையாகவே ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொருவிதமான வாசனையைக் கொண்டிருக்கும். நமது உடலில் வீசும் வாசனை ஒருவரைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும். அதே சமயம் உடலில் இருந்து வீசும் குறிப்பிட்ட வகையான துர்நாற்றம் ஒருவரது உடலில் உள்ள ஆரோக்கிய பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவதாக உடல்நல நிபுணர்களின் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் நீண்ட காலமாக டைபாய்டு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதால், அவர்களுக்கு எந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஒரு வித்தியாசமான வாசனை வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

இதனால் ஒருவர் மீது வீசும் வாசனையைக் கொண்டே மருத்துவர்களால் எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனை இருக்கும் என்பதை எளிதில் கூற முடியும். ஏனெனில் ஒரு நோயால் பாதிக்கப்பட்டால், அது உடலில் உள்ள உயிர்வேதியியல் செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, உடலில் எளிதில் ஆவியாகும் மூலக்கூறுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
இந்த மூலக்கூறுகள் இரத்தத்தின் வழியே நுரையீரவை அடைந்து, சிறுநீர், மூச்சுக்காற்று மற்றும் வியர்வையின் வழியே வெளியேறி, துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இப்போது எந்த மாதிரியான நோய்கள் உடலில் இருந்தால், அவை உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கும் என்பதை காண்போம்.
நுரையீரல் புற்றுநோய்
இதைக் கேட்டதும், நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் நுரையீரல் புற்றுநோயை ஒருவரது மூச்சுக்காற்றைக் கொண்டே கண்டறிய முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் "NaNose" என்னும் மூச்சுத்திணறல் சாதனத்தைக் கொண்டு 90 சதவீதம் வரை துல்லியமாக கண்டறிய முடியும். இந்த சாதனமானது இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
ப்ரீக்ளாம்ப்சியா
ப்ரீக்ளாம்ப்சியா என்பது ஒரு கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தமாகும். இது மிகவும் கொடிய எக்ளம்ப்சியாவின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும். இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 20 ஆவது வாரத்தில் தெரியும். இந்த பிரச்சனை இருந்தால் தீவிரமான வலிப்பு, நடுக்கம், குழப்பமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆய்வு ஒன்றின் படி, ஒருவரது கைரேகையைப் போன்றே தாயின் மூச்சுக்காற்றைக் கொண்டு 84 சதவீதம் துல்லியமாக ப்ரீக்ளாம்ப்சியாவை கண்டறிய முடிந்தது. மேலும் எக்ளம்ப்சியா அரிய நிலை மற்றும் இது ப்ரீக்ளாம்ப்சியா உள்ள பெண்களில் 3 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் செயலிழப்பு
கல்லீரல் செயலிழப்பு பிரச்சனை இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்காற்று வலுவாக இருக்கும். எப்போது ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படவில்லையோ அல்லது கல்லீரல் நச்சுக்களை வடிகட்டும் வேலையில் பிரச்சனையைக் கொண்டிருந்தாலோ, அந்நபர் மோசமான வாய் துர்நாற்றத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, இரத்த நாளங்களில் சல்பர் கலந்து, நுரையீரல் வழியாக உடல் முழுவதும் பரவி, வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, உடல் துர்நாற்றமும் வீசும். முக்கியமாக கல்லீரல் பிரச்சனையைக் கொண்டிருந்தால், ஒருவரது மூச்சுக்காற்று அழுகிய முட்டை மற்றும் பூண்டின் வாசனையைக் கொண்டிருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக பிரச்சனைகள்
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக பிரச்சனைகளை மூச்சுக்காற்றின் மூலம் கண்டறியும் ஒரு டிஸ்போசபிள் சாதனத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சிறுநீரக நோயில் மோசமான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தில் வாசனை உணர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது உடலில் இருந்து ஒரு வித்தியாசமான துர்நாற்றம் வீசும். அதுவும் அந்த வாசனையானது அழுகிய பழங்களின் நாற்றத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில் இந்நிலையில் கீட்டோன்களின் அளவு அதிகரித்து, இரத்தத்தை அதிக அமிலமாக மாற்றி, உடலில் இருந்து ஒருவித சகித்துக் கொள்ள முடியாத பழத்தின் நாற்றத்தை வீச வைக்கும். ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால், பின் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications