Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மார்பக புற்றுநோயாக இருக்கலாம்..!
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. இது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும். உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகிறது என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது... இந்த மார்பக புற்றுநோய் என்பது உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மோசமான நோயாக இருந்து வருகிறது.
இந்த மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் ஆரம்பத்தில் அதனை கண்டறிவதற்கான முக்கியத்துவம் போன்றவை நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் இதைத் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள் என்ன?
மார்பக புற்றுநோய்க்கான சரியான காரணங்களைக் கண்டறிவது கடினம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் கூட அடிக்கடி குழப்பமடைகிறார்கள். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அது மார்பக புற்றுநோயாக இருக்கும்..
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று மார்பகத்தில் கட்டி இருப்பது. ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்ட கடினமான மற்றும் வலியற்ற கட்டி புற்றுநோயாக இருக்கலாம், இருப்பினும் மார்பக புற்றுநோய்கள் மென்மையாகவும், அல்லது வட்டமாகவும் இருக்கலாம். சில சமயங்களில் அவை வலியையும் ஏற்படுத்தலாம்.. மேலும் தாமதமாக மாதவிடாய் வருவது, தாய்ப்பால் இல்லாதது அல்லது 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது ஆகிவை முக்கியமான அறிகுறிகளாகும்..
மற்ற அறிகுறிகள்
1. மார்பகத்தின் அனைத்து அல்லது பகுதியளவு வீக்கம் இருத்தல்
2. தோலில் ஏற்படும் மாற்றங்கள்
3. மார்பகத்தில் உள்ள முளைக்காம்புகள் உள்நோக்கி திரும்பியவாறு காணப்படுவது
4. மார்பகத்தில் சிவத்தல் அல்லது சொறி
தோலின் பள்ளம் ஏற்படுதல்
5. மார்பக முளைக்காம்புகளில் ரத்தம் அல்லது ஏதேனும் திரவங்கள் வெளியேறினால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
6. அக்குள் பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுவது
மார்பகச் சுயபரிசோதனை
பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். மருத்துவர் மூலமும் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்புகள் உள்ளது.. அதனால் 40 வயதை கடந்த பெண்கள் அனைவரும் இந்த சுய பரிசோதனையை மருத்துவர் மூலமாக எடுத்துக் கொள்வது நல்லது..
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
இந்தியா உட்பட அனைத்து இடங்களில்லும் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை .. புற்றுநோய் என்றாலே அது வலி மிகுந்ததாக இருக்கும் என்று தாங்களாகவே எண்ணிக் கொண்டு, வலி இல்லாத கட்டிகளை பலர் அலட்சியப்படுத்தி விட்டு இருக்கின்றனர். இதனால் நோய் தீவிரமடைந்த பிறகு கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாக அமைகிறது. அதனால் பெண்கள் மிகவும் சிரமத்திர்க்கு ஆளாவார்கள்...
மார்பகப் புற்று நோய் - தடுக்கும் வழிமுறைகள்
1. ஒரு சில யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலமும் உங்கள் ஹார்மோன்கள் சுரக்கும் அளவை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
2. வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகமாக தான் இருக்கிறது
3.வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
4. மது அருந்துவதை குறைத்துக்கொள்வதும், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான முக்கியமான விஷயங்கள்.
5. தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது, அதனால் தாமதமாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை தூண்டலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











