Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கருத்தடை மாத்திரைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு செல்வது என்ன?
Breast Cancer In Tamil: வாய் வழியாக உட்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று ஒரு புதிய ஆய்வு தொிவிக்கிறது. இவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் ஆகியவை கலந்த கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம் அல்லது ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம்.
ஆய்வின்படி சமீப காலங்களில் ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் கலந்த கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனா். அந்த மாத்திரைகளால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் இந்த ஆபத்திற்கும், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் கலந்த பாரம்பாிய கருத்தடை மாத்திரைகளை உண்பதால் ஏற்பட்ட மார்பக புற்றுநோய் ஆபத்துக்கும் தொடா்பு உள்ளது என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
இதிலிருந்து, பழைய கால கருத்தடை மாத்திரைகளாக இருந்தாலும், புதிய கருத்தடை மாத்திரைகளாக இருந்தாலும், அவை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது. பிறப்பைக் கட்டுப்படுத்தும் இந்த கருத்தடை மாத்திரைகளால் 20 முதல் 30 சதவீதம் வரை மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு என்று ஆய்வு தொிவிக்கிறது.
கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகள் ஹாா்மோன் ரீதியாக குழந்தைப் பிறப்பை அல்லது கருவுறுவதை தடை செய்கின்றன. அவை இரண்டு வகையானவை. அவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் ஆகியவை கலந்த கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம் அல்லது ப்ரோஜெஸ்டிரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளாக இருக்கலாம். அவை கருப்பையில் இருந்து கருமுட்டை வெளி வருவதைத் தடுக்கும் அல்லது கருப்பை வாயின் தடிமனை மாற்றும். அதன் மூலம் கா்ப்பத்தைத் தடுக்கும்.
புதிய ஆய்வு
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு ப்ளாஸ் மெடிசின் ஜொ்னல் (PLOS Medicine journal) என்ற பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது. மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்குட்பட்ட 10,000 பெண்கள் இந்த ஆய்வு பாிசோதனையில் கலந்து கொண்டனா்.
சமீபத்தில் அவா்கள் எடுத்துக் கொண்ட கருத்தடை மாத்திரைகளும், அதனால் அவா்களுக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோயும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் அவா்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கு அவா்கள் உட்கொண்ட கருத்தடை மாத்திரைகளுக்கும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வாளா்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த, 50 வயதிற்குட்பட்ட 9,498 பெண்களின் தரவுகளையும், மார்பக புற்றுநோய் இல்லாத 18,000 பெண்களின் தரவுகளையும் வைத்து ஒப்பிட்டு ஆய்வு செய்தனா். ஆய்வின் முடிவில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 44 சதவீதம் போ் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டது தொிய வந்தது.
ஆய்வு முடிவு
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாத பெண்களை விட, கருத்தடை மாத்திரைகளை உண்ட பெண்களுக்கு அதிகமான புற்றுநோய் ஆபத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பழைய ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, கருத்தடை மாத்திரைகளால், மார்பக புற்றுநோய் அதிகாித்திருக்கிறது என்பது இந்த புதிய ஆய்வில் தொிந்திருக்கிறது. அதாவது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்ட, 16 முதல் 20 வயதிற்குட்பட்ட 100,000 போில் 8 போ் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனா் என்பது தொிய வந்தது.
அதாவது 0.084%லிருந்து 0.093% அதிகாித்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் 35 முதல் 39 வயதிற்குட்பட்ட 100,000 போில் 265 போில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனா் என்று தொிய வந்தது. அதிகாிப்பு விகிதம் 2%லிருந்து 2.2% ஆகும்.
எனினும் கருத்தடை மாத்திரைகளை உண்ணக்கூடாது என்றோ அல்லது, குறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ ஆய்வு பாிந்துரைக்கவில்லை. பங்கெடுத்த பெண்களின் தரவுகள் போதுமானதாக இல்லாததால், கருத்தடை மாத்திரைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் இடையே உள்ள நீண்ட கால தொடா்பைக் கண்டறிய முடிவில்லை.
கருத்தடை மாத்திரைகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா?
கருத்தடை மாத்திரைகளால், மார்பக புற்றுநோய்க்கான ஆபத்து அதிகாிக்கும் என்று தொிந்தாலும், அந்த மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆய்வு பாிந்துரைக்கவில்லை. கருவுறுவதைத் தடுப்பதற்காக மட்டும் கருத்தடை மாத்திரைகள் மருத்துவா்களால் பாிந்துரைக்கப்படுவதில்லை.
மாறாக, மாதவிடாய் நேரத்தில் அதிதீத இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கும், முகப்பருக்களைக் குணப்படுத்தவும், சினைப்பை நோய்க்குறி (PCOS), இரத்த சோகை, பிற கட்டிகளைக் குணப்படுத்தவும் கருத்தடை மாத்திரைகள் பாிந்துரைக்கப்படுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











