For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயாளிகள் தங்கள் உடல் நிலைப் பற்றி ஏன் உண்மையையே மருத்துவரிடம் சொல்ல வேண்டும்?

வலி,துன்பம்,கவலை,மன வேதனை மற்றும் ஏதோ சரி இல்லை என்ற உணர்வு இவற்றை பற்றி வார்த்தைகளில் மருத்துவர்களிடம் சொல்வது மிகவும் கடினம்,பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்காமல் மருத்துவர்கள் அறிவதும் மிகவும் கடினம்.

By Peveena Murugesan
|

வழக்கமான மருத்துவ நடைமுறையில்,குறிப்பாக மலட்டுத்தன்மையை பற்றிய விவரத்தை பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து மருத்துவர்கள் அறிய வேண்டியது முக்கியமான ஒன்று. அவர்களின் உடல் அனுபவங்கள் மற்றும் ஆரோக்கியத்தை பற்றிய பயம் இவற்றை பற்றி மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வலி,துன்பம்,கவலை,மன வேதனை மற்றும் ஏதோ சரி இல்லை என்ற உணர்வு இவற்றை பற்றி வார்த்தைகளில் மருத்துவர்களிடம் சொல்வது மிகவும் கடினம்,பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்காமல் மருத்துவர்கள் அறிவதும் மிகவும் கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மருத்துவர் கூறுவது:

மருத்துவர் கூறுவது:

டாக்டர் .ரீடா செரோன் "மருத்துவ விவரம்" பற்றி கூறுவதாவது: பாதிக்க பட்டவர்கள் அவர்களின் உடல்நிலை பற்றிய விவரங்களை கூறும் போது மருத்துவர்கள் அவர்களிடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். நவீன தொழில் நுட்பம்,மருத்துவ இமேஜிங்,ரோபோடிக் அறுவை சிகிச்சை என தொழில் நுட்பம் மருத்துவ துறையில் பெருகி வருகின்றன.

தொழில் நுட்பம் :

தொழில் நுட்பம் :

பாதிக்க பட்டவர்கள் அவர்களின் பாதிப்பை குணமாக்க இவ்வாறு பல தொழில் நுட்பங்களை சார்ந்து உள்ளனர்.இந்த மருத்துவ விவரம் மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் ஒரு பிணைப்பை உருவாக்கி நோயாளியை எளிதாக குணமாக்க உதவுகிறது.

பரிசோதனைகள்:

பரிசோதனைகள்:

ஆய்வு முடிவுகள் மற்றும் ஸ்கேன் கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவர்கள் பல்வேறு தகவல்களை பெறுகின்றனர்.இந்த முடிவுகள் மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் இடையே உள்ள மருத்துவ ரீதியான இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் நோயாளிகள் உடல்நிலை பற்றிய கவலை மருத்துவர்களுக்கு அவசியமில்லாததாக மாறி அவர்களின் அனைத்து மருத்துவ விவரங்களையும் எளிதாக கேட்டு அறிந்து கொள்ள முடிகிறது.

மருத்துவ விவரத்தின் முக்கிய பங்கு:

மருத்துவ விவரத்தின் முக்கிய பங்கு:

-மருத்துவர்களுக்கு துல்லியமான முடிவை எடுக்கப் பயன்படுகிறது.

-நோயாளியை நோக்கி மருத்துவர்களின் பொறுப்புகளையும்,பரிவையும் தெரிவிக்கிறது.

-இதன் மூலம் மருத்துவரின் மேல் அதிக நம்பிக்கை ஏற்பட்டு மருத்துவர் பரிந்துரை செய்வதன் படி நோயாளிகள் நடந்து கொள்வர்.

இவை அனைத்தும் நோயாளிகளை மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும்,அவர்களை நோய்களில் இருந்து விடுபட ஊக்குவிக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


English summary

Why should you say truth to the doctor

Here is the reasons why should you say truth to the Doctor
Story first published: Saturday, February 18, 2017, 16:31 [IST]
Desktop Bottom Promotion