செக்ஸியான ஜாக்கெட் அணிந்து சிவப்பு நிற புடவையின் அழகைக் கூட்டிய பிரியங்கா சோப்ரா!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் ஜோனஸ் உடன் லாஜ் ஏஞ்சல்ஸில் கர்வா சவுத் பண்டிகையைக் கொண்டாடினார். இது இவர்கள் திருமணமாகி கொண்டாடும் இரண்டாவது கர்வா சவுத் பண்டிகை ஆகும்.

சமீபத்தில் வட இந்தியாவில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் கர்வா சவுத் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் பல பாலிவுட் நடிகைகள் தங்கள் கணவரின் நன்மைக்காகவும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் விரதம் இருந்து, பல அட்டகாசமான உடை அணிந்து இப்பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் ஜோனஸ் உடன் லாஜ் ஏஞ்சல்ஸில் இப்பண்டிகையைக் கொண்டாடினார்.

இது இவர்கள் திருமணமாகி கொண்டாடும் இரண்டாவது கர்வா சவுத் பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அன்று பிரியங்கா சோப்ரா பாரம்பரிய உடையான புடவையை அணிந்திருந்தார். அதுவும் சிவப்பு நிற புடவை அணிந்து, அதற்கு செக்ஸியான ஜாக்கெட் போட்டிருந்தார். இந்த சிவப்பு நிற புடவையில் தனது கணவருடன் சேர்ந்த எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். கீழே 2020 கர்வா சவுத் பண்டிகையின் போது பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோக்கள் மற்றும் ஸ்டைல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற புடவை

சிவப்பு நிற புடவை

பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த சிவப்பு நிற புடவையானது இரட்டை டிசைனர்களான மோனிகா மற்றும் கரிஷ்மா வடிவமைத்தது. இந்த புடவையானது லைட் வெயிட் மட்டுமின்றி, இதன் முனையில் சற்று மார்டன் தோற்றத்தைத் தரும் வகையில் ப்ரில்களைக் கொண்டிருந்தது. மேலும் இந்த புடவைக்கு பிரியங்கா சோப்ரா கோல்டன் நிற சிங்கிள் ஸ்ட்ராப் ஜாக்கெட் அணிந்திருந்தது, அவரை அழகாகவும், சற்று கவர்ச்சிகரமாகவும் காட்டியது எனலாம்.

கணவருடன் பிரியங்கா

கணவருடன் பிரியங்கா

இது பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணவருடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட மற்றொரு போட்டோ. பிரியங்கா இந்த புடவைக்கு பொருத்தமாக உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கண் மை போட்டு, நெற்றி உச்சியில் குங்குமம் வைத்து, கை, காது மற்றும் கழுத்தில் அழகிய ஆபரணங்களை அணிந்து இருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் 2019 கர்வா சவுத் தோற்றம்

பிரியங்கா சோப்ராவின் 2019 கர்வா சவுத் தோற்றம்

இது 2019 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மற்றும் ஜோனஸ் கொண்டாடிய முதல் கர்வா சவுத் போட்டோ. கடந்த ஆண்டும் பிரியங்கா சோப்ரா சிவப்பு நிற புடவையைத் தான் அணிந்திருந்தார். இந்த சிவப்பு நிற புடவையானது டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. இந்த சிவப்பு நிற புடவையின் முனைகள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான ஜாக்கெட்டும் முழுமையாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

பிரியங்காவின் மேக்கப்

பிரியங்காவின் மேக்கப்

பிரியங்கா சோப்ரா இந்த புடவைக்கு பொருத்தமாக உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு மை போட்டிருந்தார். மேலும் கழுத்தில் மாங்கல்யத்தைத் தவிர வேறு எந்த ஆபரணமும் அணியாமல், கைகளுக்கு சிவப்பு நிற வளையலை அணிந்திருந்தார்.

அழகிய தம்பதி

அழகிய தம்பதி

இது கடந்த வருடம் கர்வா சவுத் பண்டிகையின் போது பிரியங்கா சோப்ரா தனது காதல் கணவரின் கைகளை கட்டிப்பிடித்தவாறு எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, November 6, 2020, 15:06 [IST]
Desktop Bottom Promotion