இந்த மழைக்காலத்துல உங்க முடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது தெரியுமா?

மழைக்காலம் என்று வந்து விட்டால் நம் சருமத்தை பராமரிப்பது போல நம் கூந்தலையும் பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே மழைக்காலத்தில் கூந்தலுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

பொதுவாக கூந்தலுக்கு என்றாலே நாம் தேங்காய் எண்ணெய்யைத் தான் பயன்படுத்துவோம். அதற்குப் பதிலாக கூந்தலுக்கு என்று நிறைய அத்தியாவசிய எண்ணெய்களும் உள்ளன. மழைக்காலத்தில் ஏற்படும் கூந்தல் பிரச்சினைகளிலிருந்து விடுபட இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

Which oil is best for hair in monsoon season in tamil

பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற சிக்கல்களை போக்க உதவுகிறது. பருவ மழையால் நம்முடைய கூந்தல் எந்தளவு பாதிக்கப்படுகிறது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் காணப்படுகிறது. இந்த காற்றிலுள்ள ஈரப்பதத்தால் கூந்தல் உதிர்வு, பூஞ்சை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். காற்றில் உள்ள ஈரப்பதத்தால் கூந்தல் வலுவாகவே இருக்கும். இதனால் கூந்தல் உடைவது ஏற்படுகிறது.

முடி உதிர்ந்தல்

காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் கூந்தலை பலவீனமாக்கி முடி உதிர்தலுக்கு வழி வகுக்கிறது. அதிகப்படியான ஈரப்பதம் இயற்கையின் கட்டமைப்பை சீர்குலைத்து உங்கள் கூந்தலின் இயல்பான தன்மையை மாற்றுகிறது.

பொலிவற்ற கூந்தல்

காற்றில் உள்ள ஈரப்பதம் முடியை பொலிவில்லாமல் ஆக்கி விடும். இது கூந்தலை மந்தமாக்கி விடும். இது கூந்தலின் இயற்கையான பிரகாசத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முடி பொலிவற்று போய் விடுகிறது.

முடியில் பிளவு உண்டாகும்

காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் முடியிழைகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் கூந்தல் உடைந்து போகக் கூடும். மேலும் தலையில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால் பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதுவும் கூந்தல் உதிர்வுக்கு வழி வகுக்கிறது.

உச்சந்தலை பிரச்சனைகள்

மழைக்காலத்தில் ஏற்படும் ஈரப்பதமான சூழ்நிலையால் தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. எனவே மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பில் சரியான கவனம் அவசியம். உங்கள் உச்சந்தலையை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.

மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடிக்கு மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது.
  • தலைமுடிக்கு நல்ல ஈரப்பதத்தையும் பொலிவையும் கொடுக்கிறது.
  • உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
  • முடி இழைகளை உள்ளே இருந்து வலுவாக வைக்க உதவுகிறது.
  • சுற்றுப்புற மாசுக்கள், கடுமையான சூரிய ஒளி, வெப்ப ஸ்டைலிங் கருவி போன்ற சுற்றுச்சூழல் விஷயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

குறிப்புகள்: இருப்பினும் வலுவான நறுமணம் கொண்ட எண்ணெய்களை தவிருங்கள். ஏனெனில் அந்த எண்ணெய்கள் முடியை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் நிறைய அழற்சியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

எந்த மாதிரியான எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்

கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ட்ரைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சேதமடைந்த கூந்தலை சரி செய்ய மினரல் எண்ணெய்கள் போன்றவற்றை விட தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. இது முடியை உடையாமல் மற்றும் பிளவுபடாமல் காக்கிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

இது தவிர டீ ட்ரி ஆயிலை பயன்படுத்தலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உலர்ந்த கூந்தலை சரி செய்ய உதவுகிறது. டீ ட்ரி ஆயிலை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இந்த ஆயிலை உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்து வாருங்கள்.

பாதாம் எண்ணெயில் அதிகளவு வைட்டமின் ஈ காணப்படுகிறது. எனவே இது தோல் மற்றும் சருமம் இரண்டிற்கும் சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாதாம் எண்ணெயை உச்சந்தலையில் பயன்படுத்தும் போது முடியின் வேர்களை வலுவாக்கி முடி உதிர்தலை போக்க உதவுகிறது. இது கூந்தலை நீரேற்றமாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே பாதாம் எண்ணெயை கூந்தலுக்கு நீங்கள் பயன்படுத்தி வரலாம்.

Story first published: Thursday, August 3, 2023, 21:30 [IST]
Desktop Bottom Promotion